Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அமெரிக்காவில் மணிரத்னத்தின் ரோஜா, பாம்பே, தில்சே!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மணிரத்னம் இயக்கிய ரோஜா, பாம்பே மற்றும் தில்சே ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
உலகத் திரைப்பட ஆர்வலர்கள் ஒன்றுகூடும் இடம் நியூயார்க் அஸ்டோரியாவில் இயங்கும் ‘ம்யூசியம் ஆஃப் மூவிங் இமேஜ்' என்ற அரங்கில் இந்தப் படங்கள் திரையிடப்படுகின்றன.
இங்கு உலகின் தலைசிறந்த திரைப்படங்கள் திரையிடும் நிகழ்ச்சிகள், ஒரு இயக்குநரின் சிறந்த படங்களின் திரையிடல், இயக்குநர்களின் நேரடியான சந்திப்புக்கள் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும்.
இம்மாத இறுதியில் இயக்குநர் மணி ரத்னத்தின் மூன்று திரைப்படங்கள் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை திரையிடப்படும். இந்த மூன்று நாள் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சியில் மணிரத்னம் நேரடியாகப் பங்கேற்கிறார்.
நிகழ்ச்சி இயக்குநர்களில் ஒருவரான ரிச்செர்ட் பெனா இதுபற்றிக் கூறுகையில், ‘தமிழ் சினிமாவில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியவர் மணிரத்னம். இவரது திரைப்படங்கள் சிறப்பான காட்சியமைப்புகளுக்காகவும், சிறந்த பொழுதுபோக்காகவும் அதே சமயம் அரசியல், சமூக பொறுப்புணர்வுடன் கூடிய படங்களாக இருக்கும். வணிகத் திரைப்படம், கலைப்படம், அரசியல் படம் என்று காலகாலமாக திரைப்படங்களை பாகுபடுத்திக் கொண்டிருக்கும் விமரிசகர்களின் கூற்றுக்களைப் பொய்ப்பிக்கும் வகையில் மணி ரத்னத்தின் படங்கள் இவற்றின் அத்தனை கூறுகளை ஒருங்கிணைத்தே இருக்கும். மணி ரத்னம் சினிமா உலகின் ஒரு அரிய பொக்கிஷம். இந்த நிகழ்ச்சியில் அவருடைய புகழ்மிக்க படங்களை 35 எம் எம் மிகப் பெரிய திரையில் திரையிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்,' என்றார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழா நிறுவனர் கிரிஸ்டினா முரெளடா, நியூயார்க் திரைப்பட விழா முன்னாள் இயக்குநர் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ரிச்செர்ட் பெனா, மற்றும் உமா தா குன்ஹா ஆகிய மூவரும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார்கள்.
திரையிடல் விவரம்:
ரோஜா - ஜூலை 31, 2015
பாம்பே - ஆகஸ்ட் 1, 2015
தில் சே - ஆகஸ்ட் 2, 2015
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!