'உங்கள் அன்பு மற்றும் வெறித்தனமான விமர்சனத்துக்கு நன்றி!' - மணிரத்னம்!
தனது ஓ காதல் கண்மணி பெரிய வெற்றியைப் பெற உதவிய மீடியா உலகுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் மணிரத்னம்.
மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ளது. இப்படம் குறித்து ஆக்கப்பூர்வமாக விமர்சனம் எழுதிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்து மணிரத்னம் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "அன்பு மற்றும் வெறித்தனத்துடன் நீங்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களுக்கு நன்றி. இத்தனை வருட எனது கலைப்பயணத்தில் நீங்களும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள்.
இனி வரும் காலங்களிலும் நீங்கள் தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆதரவையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்று மணிரத்னம் கூறியுள்ளார்.
இந்தப் படம் வெளியாவதற்கு ஒருவாரம் முன்புதான் மணிரத்னம் மனைவி, மவுஸ் பிடித்தவர்களெல்லாம் விமர்சனம் பண்ணக் கூடாது என்று பேசி சர்ச்சையைக் கிளப்பினார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











