Don't Miss!
- News ஆ.ராசா வேட்பு மனு நிறுத்திவைப்பு.. நீலகிரி அதிமுக வேட்பாளருக்கும் சிக்கல்.. எல்.முருகன் மனு ஏற்பு!
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
வா வாத்தியாரே வூட்டாண்ட நீ வராங்காட்டி பாடலால் ஒரே இரவில் பெரிய பாடகியான மனோரமா
சென்னை: மனோரமா பொம்மலாட்டம் என்ற படத்திற்காக பாடிய வா வாத்தியாரே வூட்டாண்ட பாடலால் அவர் ஒரே நாளில் பிரபல பாடிகியாகிவிட்டார்.
மனோரமா 7 வயதிலேயே தியாகராஜ பாகவதரின் பாடல்களை அழகாக பாடி வந்துள்ளார். மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர் 1958ம் ஆண்டு ரிலீஸான மாலையிட்ட மங்கை படம் மூலம் சினிமா நடிகையானார்.
திரைத்துறையில் அவர் நடிப்பை தவிர தனது குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார்.
போகாதே போகாதே
ரத்த திலகம் படத்தில் கண்ணதாசன் எழுதிய போகாதே போகாதே என் கணவா என்ற பாடலை பாடினார் மனோரமா. அது தான் பெரிய திரையில் அவர் பாடிய முதல் பாடல்.
வா வாத்தியாரே
பொம்மலாட்டம் படத்தில் மனோரமா சென்னை பாஷையில் வா வாத்தியாரே வூட்டாண்ட நீ வராங்காட்டி நான் விட மாட்டேன் என்ற பாடலை பாடி நடித்தார். அந்த ஒரே பாடலில் அவர் மிகவும் பிரபலமான பாடகி ஆனார்.
பாட்டி சொல்லை தட்டாதே
பாண்டியராஜன், ஊர்வசி ஜோடியாக நடித்த படத்தில் ஹீரோவின் பாட்டியாக நடித்திருந்தார் மனோரமா. அந்த படத்தில் அவர் பாடிய டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற பாடல் மிகவும் பிரபலம்.
மெட்ராஸை
மே மாதம் படத்தில் மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன் பாட்டுக்கும் குரல் கொடுத்திருந்தார் மனோரமா. அவர் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.