Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அஜீத் தம்பி, தமிழகத்தில் படம் ஓட திருப்பதிக்கு பதில் முருகன் கோவிலுக்கு வரப்படாதா?: மன்சூர் அலிகான்
சென்னை: விவேகம் படம் ரிலீஸாகியுள்ள நிலையில் அஜீத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அஜீத்தின் விவேகம் படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படம் கொடூர மொக்கை என்று சிலர் கூறி வருகிறார்கள். அஜீத் ரசிகர்களோ படம் சூப்பர் என்கிறார்கள்.
இந்நிலையில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் நடிகர் மன்சூர் அலிகான் அஜீத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறயிருப்பதாவது,
தம்பி அஜித்துக்கு மன்சூர் அலிகானின் அன்பு வணக்கங்கள். தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படத்தையும் அயல் தொழில்கலைஞர்களை வைத்து எடுத்து விட்டீர்கள். தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும். படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்புடுகிறீர். தமிழ்நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோவில்களுக்கு வந்திருக்கக் கூடாதா..? உரிமையுடன், நடிப்புத் தொழிலாளி மன்சூர் அலிகான் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.