Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெப்சிக்கு எதிரான வழக்கு.. மன்சூர் அலிகானுக்கு சாதகமான தீர்ப்பு
பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.
மன்சூரலிகானின் ராஜ்கென்னடி பிலிம்ஸ் தயாரிக்கும் ‘அதிரடி' திரைப்படத்திற்கும், அல்லது அதன் பிறகு ராஜ்கென்னடி பிலிம்ஸ்தயாரிக்கும் எந்த ஒரு திரைப்படத்திற்கும், ‘பெப்ஸி' அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் எந்த இடையூறும் செய்யக்கூடாது என்றும், ராஜ்கென்னடி பிலிம்ஸ் எந்தத் தொழிலாளிகளைம் வைத்துக் கொள்ளலாம் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மன்சூர் அலிகான் கூறியிருப்பதாவது:
அதிரடி படத்தின் ஷூட்டிங்குக்கு பிப்ரவரி 27ம் தேதியிலிருந்து மார்ச் 27ம் தேதி வரைக்கும் ஒருமாதம் ஷெட்யூல் போட்டு, ஹீரோயினை வரவழைத்து, மும்பையில் இருந்து வில்லனை வர வழைத்து, லாட்ஜ்ல ரூம் போட்டு, ஒன்றரை மாதமா திட்டமிட்டு, காமிரா, ஆர்ட் டைரக்டர், டைரக்டருக்கு எல்லாருக்கும் அட்வான்ஸ் கொடுத்து, பெப்ஸி ஆளை வச்சிட்டுத்தான் ஷுட்டிங் போனேன்.
120 பேர் வரைக்கும் ஷுட்டிங் போனோம், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில ஷுட்டிங். 27ம் தேதி பாட்டு ஷுட்டிங் , 28ம் தேதி 5.30 மணிக்கு ஷுட்டிங் வரமாட்டோம்னு பாய்காட் பண்றாங்க. யாரும் வரமாட்டோம், மன்சூரலிகான் மன்னிப்புக் கேட்கணும்னு சொல்றாங்க. நான் ஆயிரக்கணக்கான தொழிலாளிக்கு வேலை கொடுக்கறவன்.
மூணு மாசத்துக்கு முன்னாடி வந்து ராதாரவி ஷுட்டிங்கில கேரவன் கேட்டாங்க. மேக்கப் மேனுக்கு தனி கார் வேணும், காஸ்ட்டியூமருக்கு தனிகார் வேணும்னாங்க. அதெல்லாம் முடியாது, உங்க காசுல தனியா வாங்கிக்குங்க. 8000,10,000னு வாங்கறீங்க, 50,000, 75000ம்னு சம்பளம் கொடுக்கறேன், மேக்கப்புக்கு ஆள் சரியா இருக்கு, புரொடக்ஷனுக்கு ஆள் கம்மியா இருக்குன்னு புரொடக்ஷன் ஆளுங்களுக்கு போன் போட்டு வரவச்சாங்க. அவங்க தயாரிப்பாளரா என்னை பார்த்திருக்கணும்.
நான் தொழிலாளர்அமைப்புக்கு எதிரானவன் கிடையாது. நான் பெப்ஸி அமைப்புல பல வருஷம் இருந்திருக்கேன்.நான் ஒரு டான்சர், டான்ஸ் மாஸ்டர் கார்டு வச்சிருக்கேன்.சினி டான்சர், சினி டான்ஸ் மாஸ்டர் அசோசியேஷன்ல மெம்பரா இருக்கேன்.சினி மியூசிஷியன்ல மெம்பர்.ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்ல லைப்மெம்பர், ஆர்ட்டிஸ்ட் அன்ட் டப்பிங் யூனியன்ல மெம்பர், 1988ல இருந்து,தயாரிப்பாளர் சங்கத்துல மெம்பர், பிலிம் சேம்பர்ல மெம்பர், நான் பெப்ஸி அமைப்பைச் சேர்ந்தவன்.
தலைமையில் உள்ள சில புல்லுருவிகள் தவறான வழிகாட்டி, அவங்க சுயநலத்துக்காக என்னை தப்பா பணியவைக்கப் பார்த்தாங்க. நான் பணிஞ்சிபோறவன் கிடையாது. சிவா, நடிகர் சங்கத்துல ராதாரவியோட வலது கை, இடது கைன்னு சொல்லப்படற கே.ஆர்.செல்வராஜ் செக்ஷன்ல இருக்கலாம். அவர்கிட்ட பேசச் சொன்னாங்க. நான் எதுக்குப் பேசணும், நான் பேசமாட்டேன்னு சொன்னேன். சிவா கிட்ட பேசச் சொன்னாங்க, சரின்னு காலையில 5.30 மணிக்கு போன் அடிச்சி சிவா கிட்ட பேசினேன். அன்னைக்கு எனக்கு தொண்டை ரொம்ப கம்மியிருந்தது. கேட்டாரு, மன்சூரலிகான் பேசறன்னன், அப்படியே போனை வச்சிட்டாரு, அதுக்கப்புறம் அவர் எடுக்கவேயில்லை.
அதுக்கப்புறம் நான் எல்லா ஆர்ட்டிஸ்ட்டையும் பேக் பண்ணி அனுப்பிட்டு, அன்னைக்கு ஷுட்டிங் கேன்சல். அதுக்கு நஷ்டஈடு 25 லட்ச ரூபாய் கேட்டிருக்கேன். அதுக்கான எல்லா செலவினங்களையும் நீதிமன்றத்துல தாக்கல் பண்ணியிருக்கேன். அது கேஸ் நடந்து முறைப்படி அவங்க இழப்பீடு தந்தே ஆகணும், நான் விடமாட்டேன்," என்றார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?