Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்ன ஒடச்சதே விஜய சேதுபதி அண்ணாதான்... மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சியான பேட்டி
சென்னை: நடிகர் தனுஷ் நடித்திருந்த மாறன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் மகேந்திரன்.
தற்சமயம் ரிப்புபரி, காரா, அமிகோ கராஜ் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்
மகேந்திரன் தற்சமயம் கொடுத்துள்ள பேட்டியில் விஜய் சேதுபதி பற்றி பல சுவாரசியமான விஷயங்களை கூறியுள்ளார்.
100 படங்கள்
மூன்று வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த மகேந்திரன் பழமொழிகளில் 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு விழா என்கிற திரைப்பட மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். உதிரி என்கிற குறும்படமும் விழா என்கிற திரைப்படமும் அவருக்கு சற்று பெயர் வாங்கிக் கொடுத்தது.
நொறுங்கிய மகேந்திரன்
விழா படத்திற்கு முன்னதாக ஒரு பெரிய இயக்குநர் தன்னை பார்த்தபோது,"டேய் வளர்ந்துட்டியாடா... தாடி மீசை எல்லாம் வைச்சிருக்க..?" என்று கேட்டாராம். பொதுமக்கள் அப்படி கேட்டிருந்தால் கூட தனக்கு பெரிதாக தோன்றியிருக்காது. ஆனால் ஒரு இயக்குநர் தன்னை பார்த்து அப்படி கேட்டபோது தனக்கு வருத்தமாக இருந்ததாகவும் விழா படத்திலும் உதிரி குறும்படத்திலும் நடித்த பிறகுதான்தான் இளைஞனாக இருப்பது பலருக்கு தெரிய வந்ததாகவும், அதன் பின்னர்தான் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தன்னை தேடி வந்ததாகவும் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி
ஒருமுறை ரெஸ்டாரண்ட் ஒன்றில் இரவு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தபோது டேய் என்று ஒரு குரல் கேட்டது திரும்பிப் பார்த்தால் விஜய் சேதுபதி நின்று கொண்டிருந்தார். சூட்டிங் முடித்த களைப்பில் இருந்த அவர், அவருடன் என்னை அழைத்துச் சென்று கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்கள் பேசிக் கொண்டிருந்தார். ஒரு முனிவன் தவமிருந்து கடவுளிடம் வரம் பெற்றவுடன் அவனுக்கு ஒரு தெளிவு இருக்கும். அதுபோலத்தான் விஜய் சேதுபதி அண்ணனிடம் ஒரு மணி நேரம் பேசி விட்டால் ஒரு ஆண்டுக்கான தெளிவு நமக்கு கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார்.
என்னை உடைத்த சேது அண்ணா
அந்த நான்கு மணி நேர சந்திப்பில், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்க நான் நடித்த படங்கள் பற்றி கூறினேன். அதற்கு நீ யார் தெரியுமா மாஸ்டர் மகேந்திரன் என்ன செய்து கொண்டு இருந்தான் தெரியுமா. உன்னைப் பற்றி உனக்கே தெரியவில்லை. நீ அப்போது செய்த சாதனைகளை இப்போது செய்ய வேண்டும் என்பது போல் அறிவுரை கூறினார் என்று மகேந்திரன் சேதுபதி பற்றி கூறியுள்ளார். மாஸ்டர் திரைப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக மகேந்திரன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.