Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம்- திருமுருகன் காந்தி
சென்னை: கத்தி மற்றும் புலிப்பார்வை போன்ற படங்களுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம் என்று மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
புலிப்பார்வை படத்தின் இசை வெளியீட்டு விழாவில், எதிர்க்குரல் எழுப்பிய மாணவர்களை நாம் தமிழர் கட்சி மற்றும் ஐஜேகே கட்சியினர் தாக்கி ரவுடித்தனம் செய்தனர்.
இரும்புத் தடிகளைக் கொண்டு அடித்து காயம் ஏற்படுத்தினர். இதில் 12 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
மேடையில் சீமான் மற்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை வைத்துக் கொண்டே இந்த வன்முறையை அரங்கேற்றினர்.
இந்த தாக்குதலுக்கு தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் இப்போது கண்டனம் வெளியிட்டுள்ளார். அவரது கண்டனம்:
"ஈழ விடுதலை அரசியலுக்கு விரோதமான, இந்திய பார்ப்பனிய அரசின் 'விடுதலைப் புலிகள் எதிர்ப்பு அவதூறு பிரச்சாரத்திற்கு' துணை செய்யும் திரைப்படமாக அமைந்திருந்த "புலிப்பார்வை" எனும் மூன்றாம்தர திரைப்படைப்பிற்கு ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பினை பதிவு செய்த மாணவ தோழர்கள் மிக மோசமாக தாக்கப்பட்ட்தை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம்."