Don't Miss!
- News ஆட்டத்தை கலைத்த பாஜக.. பெரிய கூட்டணி இல்லாமல் களம் இறங்கும் அதிமுக.. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது?
- Finance 20000 ரூபாய்க்கு கீழ் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் ஷாப்பிங்
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
திரைத் துளி
மாடல் அழகி மேதா விலாசினியின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அஜீத் மேனனை வருகிற 19ம் தேதி வரைகைது செய்ய சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
லண்டனில் நடந்த மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றபோது அஜீத் மேனன் தன்னிடம் தவறாக நடக்கமுயன்றதாகவும், கற்பழிக்க முயன்றதாகவும் கூறி மேதா சென்னை அசோக் நகர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அஜீத் மேனன், அவரது உறவினர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில்முன் ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
மேதா உள்ளிட்ட அழகிகளை அவர்கள் சம்மதத்துடன்தான் லண்டன் அழைத்துச் சென்றேன். லண்டனில் ஒருகடையில் திருடும்போது மேதா மாட்டிக் கொண்டார். அது தொடர்பாக நான் கண்டித்தது பிடிக்காமல், மேதாகுடித்துவிட்டு வந்து என்னை அடித்தார். நான் திருப்பி அடித்தேன். இருவரும் கட்டிப் புரண்டு சண்டைபோட்டோம்.
அதன்பின் மேதாவை இந்தியாவிற்குத் திருப்பியனுப்பி விட்டோம். இது உடன் வந்த மாடலிங்அழகிகள்அனைவருக்கும் தெரியும். அவர்கள் இது குறித்து சாட்சியம் அளிக்க உள்ளனர். லண்டன் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து, எனக்கு அதிகமாகப் பணம் கிடைத்திருக்கும் என்று நினைத்தும், பணத்துக்குஆசைப்பட்டுமே மேதா இந்த பொய்ப் புகார் அளித்துள்ளார்.
நான் நிரபராதி. எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனையையும்ஏற்றுக் கொள்ளத் தயாராகி இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
அவர்களது மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், இது தொடர்பாக நாளை விளக்கம் அளிக்குமாறும், அஜீத்மேனனை அது வரை கைது செய்யக் கூடாது என்றும் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.