Don't Miss!
- Sports 29 பந்தில் சுனில் நரைன் அரைசதம்.. 2வது பந்திலேயே கேட்ச்சை கோட்டை விட்ட பராக்..பாய்ந்து பிடித்த ஆவேஷ்
- News ஆ ராசா vs எல் முருகன்.. நீலகிரி தொகுதியில் வெல்லப்போவது யார்? தந்தி டிவி கணிப்பு என்ன?
- Finance என்னுடைய 5 ரூபாய் எங்க? டிவிட்டரில் கொந்தளித்த அரசு பேருந்து பயணி.. கண்டக்டர்கள் மீது டார்கெட்..!
- Lifestyle இந்த படத்தில் முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க உணர்ச்சி ரீதியா எவ்வளவு புத்திசாலி-ன்னு சொல்றோம்...
- Automobiles இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
நடிகைக்கு கேரளாவில் மருத்துவ பரிசோதனை... நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்
கொச்சி: கார் டிரைவர் மற்றும் சிலரால் கடத்தில் மானபங்கப்பட்டுத்தப்பட்ட நடிகைக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிரபல கதாநாயகியாக இருக்கும் நடிகை ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷூட்டிங்கிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது முன்னாள் டிரைவர் சுனில்குமார் திட்டமிட்டு ஆள் வைத்துக் கடத்தி, காரிலேயே 2 மணி நேரம் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட காரை ஓட்டி வந்த மார்ட்டின் உள்ளிட்ட மூவரை கேரள போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி காளமேச்சேரி பெண் நீதிபதியிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்கு மூலம் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடிகைக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. காளமேச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த பரிசோதனைகள் நடந்தன.