Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சத்தீஷ்கர் குக்கிராம வாக்காளர் பட்டியலில் ஐஸ்வர்யாராய் பெயர்.... விசாரணைக்கு உத்தரவு
ரெய்கார்க்: சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள குக்கிராமத்தில் தந்தையுடன் வசித்து வருவதாக முன்னாள் உலக அழகியும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யாராயின் பெயர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் வெளியாகியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பிரபல நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக்பச்சனுடன் மும்பையில் வசித்து வருகிறார். அவர்களுக்கு 2 வயதில் ஆரத்யா என்ற குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், சத்தீஷ்கர் மாநில குக்கிராமத்தில் ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி வாக்காளர் அட்டை இருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
குஹாரி கிராமத்தில்....
சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் மாவட்டம் பதால்கான் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் குஹாரி கிராமத்தில் ஐஸ்வர்யராய் வசிப்பதாக அவரது பெயர் உள்ளது.
தந்தை பெயர்....
அந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 15-ல் ஜஸ்வர்யாராய் பெயர் இடம் பெற்று உள்ளது. அதில் ஐஸ்வர்யராய் (வயது23), குஹாரி கிராமம், வீட்டு எண் 376 என்ற முகவரியில் அவரது தந்தையுடன் வசிப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புகைப்படத்துடன் கூடிய....
மேலும், ஐஸ்வர்யா ராயின் தெளிவான புகைப்படத்துடன் அந்த வாக்காளர் பட்டியல் அமைந்துள்ளது. அதன்படி, ஐஸ்வர்யா ராயின் தந்தை என தினேஷ்ராய் என்பவரது பெயர் பதிவு செய்யப் பட்டுள்ளது.
குழப்பம்....
மேலும் ஐஸ்வர்யா ராய்க்கு தற்போது 23 வயதாவதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மிகவும் பிரபலமான நடிகையான ஐஸ்வர்யாராயின் பெயர் இவ்வாறு போலியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறித்து ஜஷ்பூர் மாவட்ட கலெக்டர் எல்.எஸ்.கேன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை....
ஐஸ்வர்யா ராய் அந்த பகுதியில் வசிக்கவில்லை. அப்படியிருந்தும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது எப்படி? புகைப்படம் மட்டும் மாறி விட்டதா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.