Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தண்ணீர் தராத கர்நாடகா கட்டும் மேகதாது அணைக்கு தமிழக மணலா? கொதிக்கும் மன்சூர்: வீடியோ
தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகா, மேகதாது அணை கட்டி வருகிறது. அதற்கு தமிழகத்திலிருந்து மணல் எடுத்துச் செல்லப்படுகிறது என நடிகர் மன்சூர் அலிகான் சாடியுள்ளார்.
சென்னை: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே கட்டும் மேகதாது அணைக்கே தமிழகத்தில் இருந்துதான் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது என நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
பி.வி பிரசாத் தயாரித்து, இயக்கி, நடித்த படம் சகுந்தலாவின் காதலன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பி.வி.பிரசாத் அடுத்து தயாரிக்க உள்ள 'வேலை இல்லா விவசாயி' படத்தின் பூஜையும் அண்மையில் நடந்தது. இதில் விஷால், இயக்குநர் செல்வமணி, விக்ரமன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் விஷால் பேசும்போது, மாநில அரசு கேளிக்கை வரியை நீக்கி சினிமாவைக் காப்பாற்ற வேண்டும். மேலும் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், ஸ்நாக்ஸ் கட்டணம் என பொதுமக்கள் நிறையப் பணம் செலவிட வேண்டியுள்ளது. ஆகையால் இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி சினிமா உலகம் வளர வகை செய்ய வேண்டும் என கூறினார்.
சினிமாவுக்கு மட்டும் ஏன் இரட்டை வரி?
இந்த விழாவில் ஜிஎஸ்டி வரி குறித்தும் மாநில அரசு குறித்தும் நடிகர் மன்சூர் அலிகான் மிகவும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஒரே நாடு, ஒரு வரி என்று முழங்குகிறார்கள். அப்புறம் சினிமாவுக்கு மட்டும் கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரி என ஏன் இரண்டு வரிகளை விதிக்க வேண்டும்?
சின்ஃபுல் இண்டஸ்ட்ரியா சினிமா?
சினிமா என்பது இயல், இசை, நாடகத்துறை என மூன்று பெரும் பிரிவுகளில் இருந்து உருவானது. ஆனால் அதனை சின்ஃபுல் இண்டஸ்ட்ரி என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ளது. சினிமா பாவம் செய்யும் துறை என்றால் அதற்கு ஏன் பத்மஶ்ரீ விருதுகள் கொடுக்கிறீர்கள்?
அமிதாப் மட்டும் வேண்டுமா?
மத்திய அரசு, தன்னுடைய ஸ்வச் பாரத் திட்ட விளம்பரத்துக்கு சின்ஃபுல் துறையைச் சேர்ந்த அமிதாப்பச்சனை ஏன் நடிக்க வைக்கிறது? இது மாபெரும் அயோக்கியத்தனம். இந்த சின்ஃபுல் இண்டஸ்ட்ரியில் இருந்து வருகிற வருமானம் அரசுக்கு ஏன் வேண்டும்? இதை 'எண்டர்டெய்ன்மெண்ட் இண்டஸ்ட்ரி' என்று மாற்றுங்கள்.
சினிமாவில் இருந்துதானே முதல்வர்கள்!
இந்த சினிமா உலகில் இருந்து தானே பல அதிபர்கள், முதல்வர்கள். எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உருவாகியிருக்கிறார்கள்.
கர்நாடகாவுக்கு தமிழகத்திலிருந்து மணல்
கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள அணைகளில் நீர் நிரம்பியுள்ளது. கர்நாடகாவில் கட்டப்பட்டு வரும் மேகதாது அணைக்கு மணல் தமிழ் நாட்டில் இருந்துதான் செல்கிறது என்று கூறுகிறார்கள். இங்கிருந்து கொண்டு செல்லப்படும் மணல் அங்கு பல்லாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Recommended Video
அடுத்த மாநிலங்களுக்கு தமிழக மணல்
தமிழ்நாட்டில் இருந்து 10-15 லட்சம் டன் மணல் மாலத் தீவு உள்ளிட்ட பல இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அவை தமிழக ஆற்றில் இருந்துதானே எடுக்கப்படுகிறது? - இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!