Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
முத்தக்காட்சியை நீக்கிய பிறகு யு பெற்ற மேல் நாட்டு மருமகன்!
சென்சார் பற்றிய புலம்பல்கள் கோடம்பாக்கத்தில் ரொம்பவே கேட்க ஆரம்பித்துவிட்டன. முத்தக் காட்சி இருந்தால் கூட இனி ஏ தான் என்று சென்சார் கெடுபிடி காட்டுவதால், அந்தக் காட்சிகளை நீக்க வேண்டியுள்ளதாம்.
சமீபத்தில் அப்படி சென்சாரில் மாட்டிய படம் மேல் நாட்டு மருமகன்.
உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயா என்னும் வெள்ளைக்காரப் பெண் நாயகியாக அறிமுகமாகிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் எம்.எஸ்.எஸ் இந்தப் படம் மற்றும் சென்சார் பற்றிக் கூறுகையில், "ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க பல நாடுகள் பறந்தாலும். பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் நம்ம நாட்டை மிஞ்ச எந்த நாடும் இல்லை என்பதே இந்த படத்தின் கரு.
படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்து விட்டது. சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டோம். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு வசனத்தையும், நாயகன், நாயகி நடித்த முத்தக்காட்சியையும் நீக்கினால்தான் யூ சான்றிதழ் கொடுப்போம் என்று கூறினார்கள். நானும் முத்தக்காட்சியை நீக்குகிறேன் என்று கூறிவிட்டேன். அந்த வசனத்தை நீக்கி வேறொரு வசனத்தைக் குறிப்பிட்டேன். அதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, யூ சான்றிதழ் வழங்கினார்கள்," என்றார்.