Don't Miss!
- Lifestyle உங்க உடம்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம் வேணுமா? இந்த உணவில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ட்விட்டரில் விஜயைக் கலாய்த்து கடுப்பேற்றும் அஜீத் ரசிகர்கள்
சென்னை: நாட்டில் தீவிரவாதம் கூட ஒழிந்துவிடும் ஆனால் இவர்களின் சண்டைகள் முற்றுப் பெறாது போல, வாராவாரம் ஆரம்பித்து விடுகிறார்கள். எது என்று கேட்கிறீர்களா விஜய் அஜீத் ரசிகர்களின் சண்டைதான்.
விஜய் ரசிகர்கள் அஜீத்தைக் கலாய்ப்பதும், பதிலுக்கு அஜீத் ரசிகர்கள் விஜயை மரண ஓட்டு ஓட்டுவதும், என்று முடிவுக்கு வரப்போகிறது என்று தெரியவில்லை இவர்களின் சண்டைகள்.
Mental's Logic : VIJAY ANNA Trendsetter Why ?
Introduce tiz trend take Selfie at Ezhaavu vidu #MentalVijayFans pic.twitter.com/gsGBQBDrpK
— Thala My Hero (@iamRajcitizen) July 21, 2015
இன்று காலையில் இருந்து #mentalvijayfans என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர் அஜீத் ரசிகர்கள். அதுவும் இந்திய அளவில் முதல் இடத்தில் இதனை வைத்து அழகு பார்க்கும் அளவிற்கு இவர்களின் சண்டைகள் வைரலாகிக் கொண்டிருக்கின்றது இணைய தளத்தில்.
ஏற்கனவே பாலிவுட்டில் இந்த மாதிரி சண்டைகள் ஷாரூக் மற்றும் சல்மான் ரசிகர்களுக்கு இடையில் உருவானபோது, சல்மான் கான் இதில் தலையிட்டு தீர்வு கண்டார். அதே போல நீங்கள் இருவரும் உங்கள் ரசிகர்களுக்கு அறிவுரை கூறுங்கள் என்று பலபேர் கூறியும் கூட சம்பந்தப்பட்ட இரு நடிகர்களும் இதில் எதையும் செய்ய முன்வரவில்லை.
இப்படியே தொடர்ந்து கொண்டே செல்லும் இந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது யார்?