Just In
- 1 hr ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 1 hr ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 2 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 2 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- News
மூன்றரை மணி நேரம் காக்க வைத்து... பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவமதிப்பு -விவசாயிகள் சங்கம்
- Automobiles
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில் நடிகர் தீபனிடம் குறுக்கு விசாரணை
சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில், அரசு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் தீபனிடம் குற்றவியல் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன். கடந்த 2008ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக விஜயன் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக விஜயனின் மனைவியான சுதாவின் சகோதரி பானு உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை, சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின் போது அரசு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் தீபனிடம், மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன் குறுக்கு விசாரணை செய்தார்.
விசாரணையின் போது தீபன் கூறுகையில், "சாட்சி சொல்வதை தடுப்பதற்காகவே பானுவின் பணியாளர் ஒருவர் குற்ற புகார் கொடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல் அடக்கத்தின் போது, ஊர்வல வேனில் இருந்து ஜெயலலிதாவை அடித்து உதைத்தாக எனக்கு ஞாபகம் இல்லை. மேலும் விஜயன் கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு முன்னாள் முதல்வர் கருணாநிதியை, சுதா சந்தித்து பேசியது குறித்து எனக்கு தெரியாது", என்றார்.
கே.எஸ்.தினகரன் குறுக்கு விசாரணைக்கு பின்னர், சி.பி.சி.ஐ.டி தரப்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயராஜ், சுதாவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை, நடிகர் தீபனிடம் கேட்டு எதிர்த்தரப்பு வழக்கறிஞர் அவரை துன்பறுத்துகிறார், என்றார்.
வாதங்களை கேட்ட நீதிபதி பி.தேவதாஸ் வழக்கை மற்றொரு தேதிக்கு மாற்றி வைத்தார்.