Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஜெ. ரூ.10 லட்சம் உதவி: இசையமைப்பாளர் கோவர்த்தனத்திடம் வழங்கினார் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
சேலம்: இசையமைப்பாளர் கோவர்த்தனத்திடம் முதல்வரின் 10 லட்சம் ரூபாய் நிதியை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வழங்கினார்.
சேலம் பகுதியை சேர்ந்த இசையமைப்பாளர் கோவர்த்தன்(89) தமிழில் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா ஆகியோருடனும் பணியாற்றியிருக்கிறார்.

சென்னையில் வசித்து வந்த கோவர்த்தன் வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து சேலம் பகுதிக்கு சென்று அங்கே வசித்து வந்தார். மகள், மகன் இருந்தும் கோவர்த்தன் வறுமையில் வாடத் தொடங்கினார்.
கோவர்த்தன் வறுமையில் வாடுவதைத் தெரிந்து கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் அறக்கட்டளையில் இருந்து ரூ10 லட்சம் நிதி வழங்குவதாக கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று முதல்வரின் நிதியை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி நேரில் சென்று கோவர்த்தனிடம் வழங்கினார்.
10 ஆயிரத்தை அவரின் கையில் கொடுத்த அமைச்சர் 10 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறோம். மாதா மாதம் உங்களுக்கு வங்கியில் இருந்து வட்டி ரூ.8125 கிடைக்கும்.
இந்த மாதம் பணம் ரூ.10 ஆயிரத்தை முதலமைச்சர் அவர்கள் பணமாக தர கூறி பணத்தை கொடுத்து அனுப்பி உள்ளார் என கூறி பணம் ரூ.10 ஆயிரத்தை வழங்கினார்.
அமைச்சரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்ட கோவர்த்தனம் மனைவி இந்திராபாய் இருவரும், இந்த உதவிகளை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என கலங்கிய கண்களுடன் அமைச்சரிடம் கூறினர்.