Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
யானைத் தந்த வழக்கு: மோகன்லாலைக் காப்பாற்ற அமைச்சர் முயற்சி!
கேரள சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள மோகன்லால் வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள 2 யானை தந்தங்கள் இருப்பது தெரிய வந்தது. இந்த யானை தந்தங்கள் வரவேற்பு அறையில் பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்தன. இந்த யானை தந்தம் எப்படி வந்தது? என அதிகாரிகள் கேட்டதற்கு சரியான பதிலை மோகன்லால் கூறவில்லையாம்.
இந்நிலையில் மோகன்லாலுக்கு ஆதரவாக கேரள மாநில வன இலாகா அமைச்சர் கணேஷ்குமார் (இவரும் ஒரு நடிகராக இருந்தவர்) அறிக்கை விட்டார்.
மோகன்லாலை காப்பாற்ற அமைச்சர் முயற்சிக்கிறார் என கேரளாவில் குற்றச்சாட்டு எழுந்தது.
கோட்டயம் செப்பு பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பவர் மோகன்லால் வீட்டுக்கு யானை தந்தம் எப்படி வந்தது? என விசாரிக்க வேண்டும் என்று கோரி திருச்சூர் விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். இந்த மனுவில் அமைச்சர் மோகன்லாலை காப்பாற்ற முயற்சி செய்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்த தீர்ப்பு 14-ந் தேதி கூறப்படும் என விஜிலன்ஸ் நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் மேனன் தெரிவித்தார்.