Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிரபல இயக்குனரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மாடல் அழகிக்கு 3 ஆண்டு சிறை
மும்பை: பிரபல பாலிவுட் இயக்குனர் மாதுர் பந்தர்கரை கொலை செய்ய ஆள் அனுப்பிய வழக்கில் மாடல் அழகி ப்ரீத்தி ஜெயினுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது மும்பை நீதிமன்றம்.
பிரபல பாலிவுட் இயக்குனர் மாதுர் பந்தர்கர் தனது படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை 16 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2004ம் ஆண்டு மும்பையை சேர்ந்த மாடல் அழகி ப்ரீத்தி ஜெயின் போலீசில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2012ம் ஆண்டு அதை தள்ளுபடி செய்தது.
கொலை சதி
மாதுர் பந்தர்கர் மீது பாலியல் புகார் தெரிவித்த பிறகு 2005ம் ஆண்டு அவரை கொலை செய்ய தாதா அருண் காவ்லியின் உதவியாளரான நரேஷ் பர்தேசியிடம் ரூ.75 ஆயிரம் கொடுத்தார் ப்ரீத்தி.
போலீஸ்
பணத்தை வாங்கிய நரேஷ் சொன்னபடி மாதுரை கொலை செய்யவில்லை. இதையடுத்து ப்ரீத்தி கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டார். அதன் பிறகு காவ்லி இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
கைது
மாதுர் பந்தர்கரை கொலை செய்ய ஆட்களை ஏவிய குற்றத்திற்காக ப்ரீத்தி கடந்த 2005ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
தண்டனை
12 ஆண்டுகளாக நடந்த வழக்கில் மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ப்ரீத்தி ஜெயின், நரேஷ் பர்தேசி மற்றும் சிவராம் தாஸ் ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.