Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நயன்தாரா விஷயத்தில் நான் செய்தது தப்பு தான்: இயக்குனர் மோகன் ராஜா
சென்னை: நயன்தாரா விஷயத்தில் தான் செய்தது தவறு என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் இயக்குனர் மோகன் ராஜா.
கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
நயன், சிவகார்த்திகேயன் ஜோடி சேர்ந்துள்ள முதல் படம் இது. படம் குறித்து மோகன் ராஜா கூறியதாவது,
வேலைக்காரன்
சூழ்நிலைக்கேற்ப நீ மாறாதே, உனக்கு ஏற்றபடி சூழ்நிலையை மாற்று என்பதே வேலைக்காரன் படத்தின் ஒரு வரி கதை. அறிவு, ஆதி என்ற 2 வாலிபர்களை பற்றிய படம் வேலைக்காரன்.
நயன்தாரா
தனி ஒருவன் படத்தில் பணியாற்றியபோது எனக்கும், நயன்தாராவுக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டது உண்மையே. மித்ரன், சித்தார்த் அபிமன்யூ கேரக்டர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை நயன்தாரா கேரக்டருக்கு கொடுக்காதது என் தவறு.
பெருந்தன்மை
நான் நயன்தாராவின் கேரக்டருக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்காதபோதிலும் படத்தை பார்த்த அவர் நான் இன்னும் கோஆப்ரேட் பண்ணியிருக்கலாம் என்றார். அது அவரின் பெருந்தன்மை.
தவறு
தனி ஒருவன் படத்தில் செய்த தவறை வேலைக்காரனில் செய்யவில்லை. இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் வெயிட்டானது. அவர் அருமையாக நடித்துள்ளார் என்றார் மோகன் ராஜா.