ஊரே தூங்கியபோது மோகன்லால் செய்த வேலையை பாருங்க சேட்டாஸ்!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தெருக்களில் மோகன்லால் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்துள்ளார்.
மோகன்லால் பி. உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் வில்லன் என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்த படத்தில் விஷால் வில்லனாக நடிக்கிறார். இந்த படம் மூலம் ஹன்சிகா மலையாள திரையுலகில் அறிமுகம் ஆகிறார்.

சைக்கிள்
திருவனந்தபுரம் தெருக்களில் சைக்கிள் ஓட்டிச் செல்ல வேண்டும் என்பது மோகன்லாலின் நீண்ட நாள் ஆசை. அந்த ஆசையை அவர் தற்போது நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.

மோகன்லால்
வில்லன் படத்திற்காக திருவனந்தபுரம் வந்த மோகன்லால் தனது நண்பரின் உதவியுடன் அதிகாலை 4.30 மணிக்கு தெருக்களில் சைக்கிளில் சென்றுள்ளார். மக்கள் நடமாட்டம் இருக்காது என்பதால் அந்த நேரத்தில் சென்றுள்ளார்.

பழைய நெனப்பு
இளமை பருவத்தில் மோகன்லால் தனது நண்பர்களுடன் திருவனந்தபுரம் தெருக்களில் அதிகாலையில் சைக்கிளில் செல்வது வழக்கம். சைக்கிளில் சென்று இந்தியன் காபி ஹவுஸில் காபி குடிப்பது வழக்கம்.

காபி
தற்போது திருவனந்தபுரம் தெருக்களில் சைக்கிள் ஓட்டிய மோகன்லால் அதே இந்தியன் காபி ஹவுஸுக்கு சென்று காபி குடித்து மலரும் நினைவுகளில் இருந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











