Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இளம் இயக்குநர் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்ட மூடர்கூடம் நவீன்!?
மூடர்கூடம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர் என்று அடையாளப் படுத்தப்பட்டவர் நவீன். படம் முழுக்க...ப்ளாக் ஹ்யூமர், சட்டையர் வசனங்கள் என கவனம் ஈர்த்தவர்! உதாரணத்திற்கு ஒன்று- 'எடுக்கிறவன் மட்டுமில்லை; எடுக்கவிடாமல் தடுக்கிறவனும் திருடன்தான்!'
இந்த வசனம்,கால ஓட்டத்தில் அவருக்கே பொருந்திவிட்டதை என்னவென்று சொல்ல!? சமுத்திரக்கனி, 'அப்பா', 'தொண்டன்' படங்கள் பற்றி யோசிப்பதற்கு முன்பே, அப்பா - மகன் உறவுச் சிக்கலை வைத்து ஒரு கதை உருவாகியவர் சரவணன். இயக்குநர் சிம்புதேவனிடம் உதவியாளராக இருந்தவர் இவர்.
கதை பிடித்துப்போக, இதைத் தயாரிக்க முன் வருகிறார் மூடர்கூடம் நவீன். படத்திற்குப் பெயர் 'கொளஞ்சி'. ஹீரோ சமுத்திரக்கனி, ஹீரோயின் சங்கவி, இன்னொரு அறிமுக ஹீரோ என மொத்தப்படத்தையும் ஐம்பது லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டார் அறிமுக இயக்குநர் தனராம் சரவணன். 'மூடர்கூடம் நவீன்' தயாரிப்பில் உருவான படம் என்பதால் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. படமும் பிரமாதமாக வந்திருக்கிறது. அவ்வப்போது ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள். அப்பறம் வெளியாவதற்கான சுவடே இருக்காது!
என்னதான் பிரச்சினை? தயாரிப்பாளர் நவீனின் பேராசைதான்! ஐம்பது லட்சத்திற்கு குறைவான பட்ஜெட்டில் தயாரான படத்தை, இரண்டரைக் கோடி ரூபாய்க்கு தமிழ்நாடு திரையரங்க உரிமை மட்டும் கொடுத்திருக்கிறார். அதில் பாதிப்பணம் அட்வான்ஸாக தந்துவிட்டதாம். தவிர, ஓவர்சீஸ், டிஜிட்டல் மார்கெட் என ஏகத்துக்கும் காசு பார்த்துவிட்டார். படத்தின் உரிமையை வாங்கியவர்கள் சினிமாவுக்குப் புதியவர்கள். ரிலீஸ் செலவு வட்டி எல்லாம் கணக்குப் பார்த்தால், ஐந்து கோடிக்கு மேல் வியாபாரம் பண்ணினால்தான் படத்தை ரிலீஸ் பண்ணமுடியும். அவ்வளவு வியாபாரம் இல்லாததால் வாங்கியவர்கள் மண்டை காய்ந்து போயிருக்கிறார்கள்.
மூடர்கூடம் நவீனோ, போட்டதைவிட அதிக லாபம் பார்த்தாச்சு என்று விட்டேத்தியாக இருக்கிறாராம். மொத்த உழைப்பையும் கொடுத்த இயக்குநர் தனராம் சரவணன், கண்ணீரோடு கோடம்பாக்கத்தை வலம் வருகிறார்.
'வழி நம்ம முன்னாடிதான் இருக்கு... நாமதான் நடக்கணும் பாஸ்'என்று மூடர்கூடத்தில் வசனம் வைத்த படைப்பாளி, இப்படி முட்டுக்கட்டை போடுறது நல்லாவா இருக்கு?!
- வீகேஎஸ்