Don't Miss!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
1200 படங்கள்... மெல்லிசை மன்னரின் அசுர சாதனை!
தான் செய்த சாதனைகளை நினைவில் கூட வைத்துக் கொள்ளாமல் இந்த உலகை விட்டு மறைந்திருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன்.
எம்ஜிஆர் நடித்த ஜெனோவா படத்தில் இணை இசையமைப்பாளர் என்று போடப்பட்டாலும், அந்தப் படத்துக்கு உண்மையில் இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்திதான். மறைந்த தனது குரு சிஆர் சுப்பாராமனை கவுரவிக்க இணை இசையமைப்பாளர் என்று தன் பெயரைப் போட்டுக் கொண்டாராம்.
எம்எஸ் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளனர். ஆனால் எத்தனைப் படம் என்பதை துல்லியமாக பதிவு செய்து வைத்துக் கொள்ளவில்லை.
1952-ல் தொடங்கி, 1965 வரையான 13 ஆண்டுகளில் இருவரும் இணைந்து இசையமைத்த 75 படங்களின் பெயர்கள்தான் பதிவுகளில் உள்ளன. எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பிரிந்த இருவரும், மீண்டும் 1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் படத்தில்தான் இணைந்தனர். ஆனால் எதிர்ப்பார்த்த வெற்றி அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
இடைப்பட்ட காலத்தில் மீதிப் படங்கள் அனைத்தும் எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்தவைதான். இவற்றில் தமிழ் தவிர, 115 மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களும் அடங்கும்.
எம்எஸ் வியின் இசைப் பயணத்துக்கு வயது 65 நீண்ட நெடிய ஆண்டுகள். இந்தப் பயணத்தில் அவர் இசையமைப்பதை, பாடுவதை மட்டுமே சிரத்தையாய் மேற்கொண்டாரே தவிர, அவற்றைப் பதிவாக ஆவணப்படுத்துவதில் கவனம் செலுத்தவே இல்லை. ஊடகம் வளர்ந்து விரிந்த பின்னாளில் அவரது ரசிகர்கள்தான் இதைப் பதிவு செய்தனர்.
தனது இந்த சாதனையை அவர் எந்த மேடையிலும் காட்டிக் கொண்டதுகூட இல்லை.