மேலும் 120 அரங்குகளில் முடிஞ்சா இவன புடி...!
ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய முடிஞ்சா இவன புடி படம் மேலும் 120 அரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
நான் ஈ சுதீப் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் முடிஞ்சா இவன புடி.

இந்தப் படத்துக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதால் வரும் வெள்ளி கிழமையிலிருந்து தமிழகத்தில் கூடுதலாக 120 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ளது.

கன்னடத்தில் இப்படம் நான்கு நாட்களில் 18 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . முடிஞ்சா இவன புடி கன்னட திரையுலகில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. ராம்பாபு ப்ரொடெக்ஷன்ஸ் சார்பில் எம்.பி. பாபு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











