Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எம்.எஸ்.விஸ்வநாதன் உடல் நிலையில் முன்னேற்றம்.. டாக்டர்கள் தகவல்
சென்னை: கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
"மெல்லிசை மன்னர்" என அன்போடு அழைக்கப்படுபவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் சர்க்கரை நோய் மற்றும் வயோதிகத்தால் அவதிப்பட்டு வந்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு அவர் பூரண குணம் அடைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று அவருக்கு 86 வயது நிறைவடைந்து 87வது வயது பிறந்தது. இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக அவர் நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக அவருடைய மகன் கோபி, ‘‘வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.