Don't Miss!
- News நிர்மலா கிட்ட காசு இல்லை.. அப்ப தமிழிசையிடம் பணமிருக்கா? நிதியமைச்சர் மீது பாய்ச்சல்? யார்னு பாருங்க
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வாட்ச் ஆர்டர் செய்தவருக்கு வந்தது கற்கள்.. ஆன்லைனில் அதிரடி மோசடி.. பிரபல இசை அமைப்பாளர் புகார்!
சென்னை: ஆன்லைன் மோசடி காரணமாக பிரபல இசை அமைப்பாளர் பாதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்களிடம் மோசடி நடப்பது சில வருடங்களாக அதிகரித்து வருகிறது.
எதையாவது பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தால், அதற்கு பதிலாக, செங்கல், கற்களை அழகாக பார்சல் செய்து அனுப்பி மோசடியில் ஈடுபடுகிறார்கள்.
பிக்பாஸில் தர்ஷன் இடத்தை நிரப்ப போவது இந்த மிஸ்டர் இந்தியாதானாம்.. நிச்சயம் ஒரு லவ் ஸ்டோரி கேரண்டி!
சோனாக்ஷி சின்ஹா
பிரபல நிறுவனங்களின் பெயர்களில் நடக்கும் இதுபோன்ற ஆன்லைன் மோசடியில், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா, சினேகா உல்லால் உள்பட சிலர் நடிகைகள் இதில் பாதிக்கப்பட்டு அதுபற்றி கூறியிருந்தனர்.
இசை அமைப்பாளர் சாம்
இந்நிலையில் இப்போது பிரபல இசை அமைப்பாளர் சாம் சிஎஸ், இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளார். சாம்.சிஎஸ், விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள், அடங்கமறு, நோட்டா, அயோக்யா, கார்த்தியின் கைதி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
ராக்கெட்ரி
இப்போது மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி:நம்பி விளைவு, பெல்பாட்டம், கசடதபற உள்பட சில படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இவர் ஆன்லைனில் தான் ஏமாற்றப்பட்டதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இவர் தனது சகோதரரின் பிறந்த நாளுக்கு ஆப்பிள் வாட்ச் பரிசளிக்க நினைத்தார். இதற்காக பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஆர்டர் செய்தார்.
கற்களை பேக் செய்து
அது வந்த போது மகிழ்ச்சியாக வாங்கி வைத்தார். பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். உள்ளே, கற்களை அழகாக பேக் செய்து அனுப்பியுள்ளனர். அது பற்றி பிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் அளித்திருக்கிறார் சாம் சிஎஸ். ஆனால், அவர் புகாரை அந்த நிறுவனம் நிராகரித்து விட்டதாம். பணத்தைத் திருப்பி தர மறுத்து விட்டதாகவும் சாம் சி.எஸ் கூறியுள்ளார்.
ஏமாற்றுக்காரர்கள்
தயவு செய்து இந்த நிறுவனத்தில் இருந்து பொருட்கள் வாங்காதீர்கள். ஏமாற்றுக்காரர்கள் என கூறியிருக்கிறார். கூடவே புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம், 'வருந்துகிறோம், உங்கள் ஆர்டர் ஐடியை அனுப்பி வையுங்கள், உதவுகிறோம் என்று பதிலளித்து இருக்கிறது சாம் சி.எஸ்.சுக்கு.
டூப்ளிகேட் பொருள்
ரசிகர்கள் சிலர் தங்கள் அனுபவத்தையும் கூறியுள்ளனர். ஒருவர் தனக்கு டூப்ளிகேட் பொருளை அனுப்பி ஏமாற்றியதாக போட்டோவுடன் பதிவிட்டுள்ளார். இன்னொருவரும் தான் ஏமாற்றப்பட்டதை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். சில நெட்டிசன்ஸ், ஆன்லைனில் பொருட்களை வாங்காதீர்கள் என்று கூறி வருகின்றனர்.