Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இசைக்கு எல்லைகள் என்பதே கிடையாது... இசைஞானி இளையராஜா !
வாஷிங்டன்: இசைக்கு நாடு கிடையாது. நேரம் கிடையாது. எதுவுமே கிடையாது. இசை என்பது இசைதான். இசை எல்லைகளை கடந்தது. அதற்கு எல்லைகள் என்பதே கிடையாது என்று இசைஞானி இளையராஜா கூறினார்.
காஷ்மீர் மாநிலம் யுரியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கலைஞர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவ நிர்மான் சேனா கட்சி மிரட்டல் விடுத்தது. இந்தி படங்களில் நடித்து வரும் பாகிஸ்தான் நடிகர்கள் பவாத்கான் மற்றும் மஹீராகான் ஆகியோரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்தனர்.
இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் இசைப்பயணம் மேற்கொண்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை வாஷிங்டன் நகரில் செய்தியாளர்கள் சந்தித்து பாகிஸ்தான் கலைஞர்கள் வெளியேற வேண்டும் என்று கெடு விதித்து இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், "இசைக்கு நாடு கிடையாது. நேரம் கிடையாது. எதுவுமே கிடையாது. இசை என்பது இசைதான். இசை எல்லைகளை கடந்தது. அதற்கு எல்லைகள் என்பதே கிடையாது" என்று கூறினார்.
ஆரம்ப காலத்தில் உங்களுடன் பணியாற்றிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்ட போது, "இந்த கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். அவரைப்பற்றி உங்களிடம் ஒரு கருத்து இருக்கும். அது இருக்கட்டும். நானும் அதே உணர்வுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க கூடாது"என்று பதில் அளித்தார்.