Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
"கொம்பன்" கார்த்தியைத் தொடர்ந்து "சிங்கம்" சூர்யாவைக் கையில் எடுக்கும் "குட்டிப்புலி" முத்தையா!
சென்னை: முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'குட்டிப்புலி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான முத்தையாவுக்கு அப்படம் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பின் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய 'கொம்பன்' வசூல் ரீதியாக ஹிட்டடித்தது.
''மெட்ராஸ்' படத்துக்குப் பின் கார்த்திக்கு மிகப்பெரிய ஹிட்டாகவும் 'கொம்பன்' அமைந்தது.இந்நிலையில் அடுத்ததாக சூர்யாவை, முத்தையா இயக்கப் போவதாக தகவல்கள் அடிபடுகின்றன.
அம்மா, மாமனார், பாட்டி என ஒவ்வொரு படத்திலும் விதவிதமான செண்டிமெண்ட்டை வைத்த முத்தையா இதில் அப்பா செண்டிமெண்டை கையில் எடுக்கவிருக்கிறாராம்.
சூர்யாவுக்கு அப்பாவாக ராஜ்கிரணை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். இதுகுறித்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ''முத்தையா எங்கள் படத்திற்கு கதை எழுதுவது உண்மைதான் ஆனால் ஹீரோ யார்? என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை'' என்று கூறுகின்றனர்.
எனினும் சூர்யா இப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.