நீ சுத்த போருய்யா: இளம் ஹீரோவை பிரிந்து சென்ற காதலி
மும்பை: உன்னுடன் இருந்தால் போர் அடிக்குது என்று கூறி என் முதல் காதலி என்னை பிரிந்து சென்றார் என்று நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புட் தெரிவித்துள்ளார்.
டோணி படம் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புட். அவரும், க்ரிட்டி சனோனும் சேர்ந்து நடித்த ரப்தா படம் பிளாப் ஆகிவிட்டது.
இந்நிலையில் சினிமா, காதல் பற்றி சுஷாந்த் சிங் கூறியிருப்பதாவது,

சினிமா
நான் எப்படி திரையுலகில் தாக்குப்பிடிக்கிறேன் என்பதற்கான காரணங்களை மக்களை கண்டுபிடிக்கிறார்கள். அது அவர்களின் பிரச்சனை, என்னுடையது அல்ல.

ரேஸ்
நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை. நம்பர் 1 இடத்தை பிடிக்கும் ரேஸிலும் நான் இல்லை. எதிர்காலத்தை நினைத்து கவலையும் இல்லை. நான் எதையும் மறைக்கவும் இல்லை.

காதலி
என்னை பற்றி சில தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. நான் போர் என்று கூறி என் முதல் காதலி என்னை பிரிந்து சென்றார். அதில் இருந்து சுவாரஸ்யமான ஆளாக இருக்க முயன்று வருகிறேன்.

கேதர்நாத்
நான் தற்போது கேதர்நாத் படத்தில் நடித்து வருகிறேன். ஹீரோயின் சாரா அலி கானின் அம்மா அம்ரிதா பட விஷயத்தில் தலையிடுவதாக கூறுவதில் உண்மை இல்லை என்றார் சுஷாந்த்.


Click it and Unblock the Notifications











