Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பொறுக்கிப்பய.. எங்க அம்மாவை அசிங்கமா திட்டுனான்.. விஷாலை ஆக்ரோஷமாக வச்சு விளாசிய மிஷ்கின்!
சென்னை: துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டதற்கு, அவர் போட்ட 15 கண்டிஷன்கள் தான் காரணம் என விஷால் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, விஷாலுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மிஷ்கின்.
Recommended Video
கடந்த 2017ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, வினய் ராய் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அந்த படம் வெற்றியடைந்ததால், மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடிப்பில் துப்பறிவாளன் 2 தொடங்கியது.
மிஷ்கின் நீக்கம்
லண்டனில் பிரம்மாண்டமாக துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்கு முன்னாள் இயக்குநர், மிஷ்கின் திடீரென 10 கண்டிஷன்களை போட்டதாக ஆதாரத்துடன் நடிகர் விஷால், தெரிவித்து, இதனால், தான் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டார் என்பதையும் விளக்கி இருந்தார்.
பதில் சொல்லல
மேலும், எந்த ஒரு தயாரிப்பாளர்களும் இதுபோன்றவர்களிடம் பலியாடாகி விடாதீங்க என்றும் எச்சரித்து இருந்தார். விஷாலின் இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்த அறிக்கை குறித்து எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் இயக்குநர் மிஷ்கின் மெளனம் காத்தது, கோலிவுட் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியது.
விளாசல்
இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தின் புதிய வெப்சீரிஸ் படைப்பான கண்ணாமூச்சி பிரஸ்மீட்டில், இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டு, அந்த மேடையை பயன்படுத்தி, நடிகர் விஷாலை பொறுக்கி, பொறுக்கிப்பய என சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்துள்ளது கோலிவுட் வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
7 முறை பொறுக்கி
துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து தன்னை நீக்கிவிட்டு, விஷாலே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள கோபத்தில், மிஷ்கின், நடிகர் விஷாலை பொறுக்கி என தொடர்ந்து 7 முறை திட்டி தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார். மேலும், மிஷ்கினின் தாயை ஆபாசமாக விஷால் திட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
குருக்ஷேத்ர போர்
தொடர்ந்து விஷால் குறித்து வசை பாடிய இயக்குநர் மிஷ்கின், தமிழ்நாட்டை விஷாலிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், உன் பக்கம் தர்மம் இருந்தா வாடா குருக்ஷேத்ர போருக்கு என்றும் இனிமே நீ தூங்கவே மாட்ட டா என்றும் பல சபதங்களை செய்தது போல ஆக்ரோஷத்தின் உச்சிக்கே சென்று ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார்.
பேனா இருக்கு
எப்படி வெறுங்கையோடு, பேனா கையில் இருக்கிற நம்பிக்கையோடு, சென்னைக்கு வந்தேனோ, அதேமாதிரி இப்பவும் பேனாவை நம்பி பிழைப்பேன் டா.. சினிமா வாய்ப்புகளே வரவில்லை என்றாலும், வாத்தியாரா போய் பாடம் நடத்துவேன் என கோபக் கனலை வீசி கண்ணாமூச்சி பிரஸ்மீட்டில் கண்ணகி அவதாரம் எடுத்து விட்டார் மிஷ்கின்.
கதை எழுத தெரியுமா?
மேலும், விஷாலுக்கு கதை எழுத தெரியுமா? 8 மாதங்கள் நான் சிந்தித்து எழுதிய கதையை, தொடர்ந்து ஆட்களை அனுப்பி, தொல்லை பண்ணி NOC வாங்கியிருக்கான். எந்த எழுத்தாளர்களின் புத்தகங்களையாவது படிச்சிருக்கானா, சக்ரா படத்துக்கே நான் தாங்க கதையை கரெக்ட் பண்ணி கொடுத்தேன் உள்ளிட்ட பல விஷயங்களை மேடைகளை போட்டுடைத்துள்ளார்.