Don't Miss!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'நானும் ஒரு குழந்தை' - பா.ரஞ்சித் ஒருங்கிணைக்கும் புகைப்படக் கண்காட்சி!
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், 'நானும் ஒரு குழந்தை' எனும் புகைப்படக் கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்துகிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியில் புகைப்படக் கலைஞர் ம.பழனிக்குமார் எடுத்த புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட இருக்கின்றன.
'சாதியை ஒழிப்போம்... சமூக மாற்றத்திற்கான மனிதமாண்பை மீட்டெடுப்போம்' எனும் உறுதிமொழியோடு 'நானும் ஒரு குழந்தை' புகைப்படக் கண்காட்சிக்கான கரு தொடங்கியிருக்கிறது.
மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் துயரம், மலமள்ளும் தொழிலாளர்கள் அன்றாடம் படும் துன்பங்கள், அவர்களது வாழ்வியல், அவர்களது குழந்தைகளின் எதிர்காலம், மரணத்தை தினமும் எதிர்நோக்கும் அவர்களது வாழ்க்கை என விளிம்புநிலை மக்களின் உணர்வுகளைத் தனது புகைப்படங்களின் மூலம் பிரதிபலிக்கிறார் ம.பழனிக்குமார்.
சாதியால் தாழ்த்தப்பட்ட விளிம்பு நிலை மக்களின் துயரத்தை, நேயத்தை, கோரிக்கையை குழந்தைகளின் புகைப்படங்கள் வழியாக எல்லோருக்கும் கடத்த முயற்சித்திருக்கிறார் பழனிக்குமார். இவர் திவ்யபாரதி இயக்கிய 'கக்கூஸ்' ஆவணப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#நானும் ஒரு குழந்தை''..மகிழ்வோம் !!!! pic.twitter.com/9KlMG4iSCj
— pa.ranjith (@beemji) November 7, 2017
நவம்பர் 8-ம் தேதி மாலை ஆறு மணிக்கு சென்னை க்ரீம்ஸ் ரோடு லலித்கலா அகாடமியில் இந்தப் புகைப்படக் கண்காட்சியின் துவக்கவிழா நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை லலித்கலா அகாடமியில் புகைப்படக் கண்காட்சி நடைபெற இருக்கிறது.