Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
‘செவாலியே’ கமலுக்கு பாராட்டு விழா.. நடிகர் சங்கம் அறிவிப்பு
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது பெறும் நடிகர் கமலுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை: உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே பெறும் நடிகர் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதில் பேரார்வம் கொண்ட நடிகர் கமலின் கலைச் சேவையை பாராட்டி, கடந்த ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் அரசு உயரிய விருதான செவாலியே அளிக்கப்படும் என அறிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கமலுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், செவாலியே விருது பெறும் கமலுக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், "நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியர் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும்" என்றார்.
மேலும் இந்தப் பேட்டியின் போது, 'முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும்' அவர் தெரிவித்தார்.