Don't Miss!
- News ஏப்ரல் மாத ராசி பலன் 2024: மேஷ ராசியில் சூரியன் உச்சம்.. திடீர் லக் யாருக்கு தேடி வரும்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Automobiles கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
நடிகர் சங்கத்திற்குத் தேர்தல்... ஜூலை 15ம் தேதி நடைபெறும் என சரத்குமார் அறிவிப்பு!
சென்னை: நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவது தொடர்பான பிரச்சினையில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கும் நடிகர் விஷாலுக்கும் நடந்து வருகின்ற பிரச்சினை ஊருக்கே அவலாக மாறியிருக்கும் இந்த வேளையில் நடிகர் சங்கத் தேர்தல் வரும் ஜூலை மாதம் 15 ம் தேதி அன்று நடைபெறும் என்று சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
ஒருபக்கம் சங்கக் கட்டிடம் முடிஞ்சாத்தான் கல்யாணம் என்று மார்தட்டிக் கிளம்பி இருக்கிறார் நடிகர் விஷால். மறுபக்கம் சங்கக் கட்டிடம் தற்போது கட்ட முடியாது என்று கூறி வருகிறார் தலைவர் சரத்குமார். தினமும் தமிழ்த் திரையில் படங்கள் வெளியாகிறதோ இல்லையோ இவர்கள் இருவரின் ஆவேசப் பேட்டிகள் தாங்கி தினசரி பத்திரிக்கைகள் வெளிவருவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று மாலை தியாகராய நகரில் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி முன்னிலையில் நடைபெற்றது. பல்வேறு நடிக, நடிகையர் உறுப்பினர்களாக கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் இரு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
2015 -2018 க்கான நடிகர் சங்கத் தேர்தல் வரும் 15.7.2015 அன்று வடபழனியில் என்.எஸ்.கலைவாணர் சாலையில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் நடத்துவது என்றும், தேர்தல் அதிகாரிகளாக வழக்கறிஞர் ஜெ. செல்வராசன் மற்றும் அவருக்கு உதவியாக வழக்கறிஞர் ஜேம்ஸ் அமுதன் ஆகியோரை நியமிப்பது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விஷால் களத்தில் குதிப்பாரா.........?