Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசனுடன் நடிகர் சங்கத்தினர் சந்திப்பு!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டட நிதிக்காக நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 17-ல் நடைபெற உள்ளது.
சென்ற மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றபோது பேசிய விஷால், "சங்க வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணி தொடங்கியுள்ளது. இதற்கான நிதியை பல வகைகளில் திரட்ட முடிவு எடுத்துள்ளோம். முதல் கட்ட நிதிக்காக வரும் ஏப்ரல் 10-ல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் ஒட்டுமொத்த திரைத்துரையினரும் பங்கேற்க உள்ளனர்," என்று கூறினார்.
இதன் அடுத்தக்கட்ட முயற்சியாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் என். சீனிவாசனை, நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள்.
அதன்படி கிரிக்கெட் போட்டி நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 10-ம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 17 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.