Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மோதல்: 20 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை: நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தின்போது மோதலில் ஈடுபட்ட 20 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சங்க பொதுச் செயலாளர் விஷால் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் நிர்வாகிகள் சிலரின் ஆதரவாளர்கள் அழைப்பிதழ் இல்லாமல் கூட்டத்திற்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியபோது மோதல் ஏற்பட்டது. நிலைமை கையை மீறிச் சென்றதும் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதற்கிடையே மைதானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது குறித்து கருணாஸின் கார் டிரைவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மோதல் குறித்து நடிகர் ஜே.கே. ரித்திஷ் சார்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பை சேர்ந்த 20 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.