காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக நடிகர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை: காவிரி மேலாண்மை அமைக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் நடிகர் சங்கம் சார்பில் வரும் ஏப்ரல் 8-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

"தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி 'ஸ்டெர்லைட் ஆலை'யை மூட வலியுறுத்தியும் மற்றும் 'காவிரி மேலாண்மை வாரியம்' மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.

இந்த அறவழி கண்டன போராட்டத்தில் திரைப்பட துறையை சார்ந்த அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்."
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











