Don't Miss!
- News பரம்பரை வரி விதிப்போம் என்கிறது காங்கிரஸ்.. கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை பறிக்க முயற்சி! விடாத மோடி
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடிகர் சங்கம் போராடாது! - விஷால்
சென்னை: காவிரி, இலங்கைத் தமிழர் விவகாரம் போன்றவற்றில் நடிகர் சங்கம் போராடாது. அதே நேரம் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு உண்டு என்று விஷால் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஷால் கூறுகையில், "பாண்டிராஜ் இயக்கத்தில் 'கதகளி' படத்தில் நடித்து வருகிறேன். படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் 'மருது'வில் நடிக்கிறேன். அதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' நடிக்கவிருக்கிறேன்.
'மருது' படத்தில் ராதாரவியுடன் நடிக்கவிருப்பதாக செய்தி வருகிறது. அது இன்னும் முடிவாகவில்லை. அவ்வாறு நடிக்கும் சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். நடிகர் சங்கம் என்பது வேறு, நடிப்பு என்பது வேறு. ராதாரவியுடன் மட்டுமல்ல சரத்குமாருடன் கூட இணைந்து நடிப்பேன்.
அடுத்தாண்டும் எனக்கு தலை தீபாவளி கிடையாது. முதலில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்பதே என் முதல் குறிக்கோள். நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் நடிகர் சங்க இடத்தின் பத்திரங்களை ஒப்படைத்துவிட்டார். இப்போது கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து வருகிறோம். 2017-ம் ஆண்டுக்குள் கட்டிடம் கண்டிப்பாக கட்டி விடுவோம்," என்றார்.