Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கருணாஸ், வாகை சந்திரசேகர் இருவரும் மக்கள் பணியில் சிறந்து விளங்க வேண்டும் - நடிகர் சங்கம்
சென்னை: கருணாஸ், வாகை சந்திரசேகர் இருவரும் மக்கள் பணியில் சிறந்து விளங்க வேண்டும் என நடிகர் சங்கம் வாழ்த்தியிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாஸ், வாகை சந்திரசேகர் இருவரும் வெற்றிவாகை சூடியுள்ளனர். சரத்குமார், விஜயகாந்த் தோல்வியுற்ற நிலையில் இவர்கள் இருவரும் வெற்றி பெற்றிருப்பது பலரின் புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் கருணாஸ், வாகை சந்திரசேகர் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் ''தென்னிந்திய நடிகர் சங்க வரலாற்றில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களில் தொடங்கி இன்றுவரை பலரும் மக்களுக்கு கலைப்பணியாற்றி புகழ் பெற்றிருக்கிறார்கள்.
அதுபோல நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவாடானை தொகுதியில் நடிகர் கருணாஸும், வேளச்சேரி தொகுதியில் நடிகர் வாகை சந்திரசேகரும் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
அவர்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்கி திரைத்துறைக்கும் பெருமை சேர்த்து, மேலும் பல நிலைகளுக்கு உயர வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்துகிறது'' எனக் கூறியுள்ளனர்.
நடிகர் சங்கத் தேர்தலில் கருணாஸும், வாகை சந்திரசேகரும் எதிரெதிர் அணியில் இருந்தனர். அதேபோல இந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாஸ் அதிமுக கட்சி சார்பிலும், சந்திரசேகர் திமுக கட்சியிலும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.