சமந்தாவை பத்தி பேசாதீங்க.. என் வேலையை பத்தி மட்டும் பேசுங்க.. கடுப்பான நாக சைதன்யா!
ஹைதராபாத்: நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் பிரிவதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவித்ததில் இருந்து இருவரது வாழ்க்கையிலும் ஏகப்பட்ட ட்ரோல்களையும் ஹேட்ரட்களையும் சந்தித்து வருகின்றனர்.
ஒரு பக்கம் சமந்தா என்ன சாதித்தாலும் நாக சைதன்யாவை பிரிந்ததில் இருந்து ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்டுகள் அவரை டார்ச்சர் செய்து வருகின்றன.
இந்நிலையில், நாக சைதன்யாவும் அதே போன்ற பிரச்சனையில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சமந்தாவை விவாகரத்து செய்தார்
முதல் படத்தில் முளைத்த காதல் காரணமாக நடிகை சமந்தாவை நடிகர் நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆனந்தமாகவும் அன்பாகவும் சென்ற இருவரது வாழ்க்கையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு சமந்தா மீது தப்பா? நாக சைதன்யா இன்னொரு பெண்ணை காதலிக்கிறாரா? என ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பின.

இருவருமே தனியாக
ஆனால், கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆக உள்ள நிலையில், இருவருமே அடுத்ததாக யாருடனும் டேட்டிங் செல்வது போல எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இருவரும் தொடர்ந்து தனியாகவே தங்களது சினிமா பயணத்தை நோக்கி பயணித்து வருகின்றனர். மனைவி சமந்தா பாலிவுட்டில் சாதித்த நிலையில், தானும் பாலிவுட்டில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என அமீர் கான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் நாக சைதன்யா.

சமந்தாவை பற்றிய பேச்சு
இந்நிலையில், சமீபத்தில் நாக சைதன்யா அளித்த ஒரு பேட்டியில், என்னுடைய சினிமா மற்றும் என் உழைப்பை பற்றி யாரும் பெரிதாக பேசுவதாக தெரியவில்லை. இத்தனை மாதங்கள் ஆகியும் என்னுடைய சொந்த வாழ்க்கைப் பற்றிய கூச்சல்களே அதிகம் ஒலித்து வருகின்றன. ஆனால், அதைப் பற்றியெல்லாம் எனக்கு எந்த கவலையும் இல்லை, இதே வாய் நாளைக்கு என் படங்களையும் என் உழைப்பையும் பற்றி பெருமையாக பேசத் தான் போகின்றனர், அதற்காக எப்போதுமே கடுமையாக உழைப்பேன் என பேசி உள்ளார்.
Recommended Video

ஆகஸ்ட் 11 முதல் மாறும்
நடிகர் அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தில் முதலில் இந்த ராணுவ வீரர் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய்சேதுபதியைத் தான் அமீர்கான் அணுகியிருந்தார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக விஜய்சேதுபதி அந்த படத்தில் நடிக்கவில்லை. இந்நிலையில், அந்த வாய்ப்பு நாக சைதன்யாவுக்கு கிடைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி லால் சிங் சத்தா வெளியான பிறகு பலரும் தன்னை அந்த படத்திற்காக பாராட்டுவார்கள் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











