நாகார்ஜுனா - கார்த்தி படம்... அமலா க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார்!
நாகார்ஜுனாவும் கார்த்தியும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை நடிகை அமலா க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகிறது. தெலுங்கில் காஷ்மோரா என தலைப்பிடப்பட்டுள்ளது.

கார்த்தி நடித்த சில படங்கள் தெலுங்கிலும் ரீமேக்காகி வெற்றி பெற்றிருக்கின்றன.
கார்த்தி-நாகர்ஜூனா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை அன்னப்பூர்ணா ஸ்டுடியோவில் நேற்று நாகர்ஜூனாவின் மனைவியும், நடிகையுமான அமலா கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். நாகார்ஜுனாவின் மகன்கள் நாக சைதன்யா, அகில் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இப்படத்தை பிவிபி சினிமாஸ் தயாரிக்கிறது. வம்சி பிடிபாலி இயக்குகிறார்.
இப்படத்தின் பிற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











