Don't Miss!
- Finance மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு.. அதுவும் எலான் மஸ்க் இந்தியா வரும் நேரத்தில்.. வாவ்..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- News நாளை வாக்கு பதிவு: ஸ்டாலின், எடப்பாடி தலைமைக்கு அக்னி பரீட்சை ஏன் தெரியுமா?
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நந்தினி சீரியல் நடிகைக்கு ஆபாச போட்டோ அனுப்பிய வாலிபர் 'இவர்' தான்
சென்னை: நந்தினி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நித்யா ராமுக்கு வாலிபர் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்.
கன்னட நடிகை ரச்சிதா ராமின் சகோதரி நித்யா ராம். நந்தினி தொலைக்காட்சி தொடரில் கங்காவாக நடித்து வருகிறார். அவரின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் நித்யா ராமுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்
ரசிகர் என்று சொல்லிக் கொண்டு ஃபேஸ்புக்கில் அறிமுகமான கவுதம் என்ற வாலிபர் நித்யா ராமுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார்.
நித்யா ராம்
தனக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி எரிச்சலூட்டிய கவுதமை ஃபேஸ்புக் மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் நித்யா ராம். என் ரசிகர் என்று சொல்லிக் கொண்டு இந்த நபர் எனக்கு தொல்லை கொடுத்தார் என்று போஸ்ட் போட்டுள்ளார் நித்யா.
அம்மா
ஒரு பெண்ணுக்கு ஆபாச புகைப்படம் அனுப்புவது சரி என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் அம்மாவாகட்டும், சகோதரியாகட்டும் எந்த பெண்களையும் மதிக்கதாவர் என்று தெரிகிறது என்கிறார் நித்யா ராம்.
போஸ்ட்
ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொண்டு தப்பிக்க முடியாது என்பதை அவருக்கு புரிய வைக்கவே இந்த போஸ்ட் போட்டுள்ளேன். இவரை போன்றவர்கள் பாடம் கற்றுக் கொண்டு நாங்கள் பிரபலங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிரபலம் என்பதை தாண்டி நான் ஒரு பெண், எனக்கு கவுரவம் உள்ளது என ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் நித்யா ராம்.