கிரண் பேடி ஆணா, பெண்ணா?: ராதாரவியை தூக்கி சாப்பிட்ட நாஞ்சில் சம்பத்
Recommended Video

சென்னை: ராதாரவி பிரச்சனையே இன்னும் ஓயவில்லை அதற்குள் புது பிரச்சனையை கிளப்பியுள்ளார் நடிகரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்.
கொலையுதிர்காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி படத்தின் ஹீரோயினான நயன்தாராவை பற்றியே தரக்குறைவாக பேசினார்.
அவர் பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

பிரச்சாரம்
நயன்தாராவை ராதாரவி கேவலமாக பேசிய பிரச்சனை ஓயும் முன்பு நடிகரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் புது சர்ச்சையை கிளப்பியுள்ளார். புதுச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான வைத்தியலிங்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நாஞ்சில் சம்பத் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை தரக்குறைவாக பேசியுள்ளார்.

கிரண் பேடி
கிரண் பேடியின் செயல்களை விமர்சித்து பேசிய நாஞ்சில் சம்பத் அவர் ஆணா, பெண்ணா என்றே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். கிரண் பேடியின் பெயர் கூட தெரியாமல் நீரவ் மோடி என்று அவர் பேச அவரின் பின்னால் நின்றவர் கிரண் பேடி என்று திருத்தினார். டெல்லியிலே காயடிக்கப்பட்டு எங்கே கொண்டு போகலாம் என்றால் பாண்டிச்சேரியிலே வந்து விடுவதா என்றார் நாஞ்சில் சம்பத். அதை கேட்டு அங்கிருந்தவர் நக்கலாக சிரித்தனர்.

விளம்பரம்
பட விழாக்களில் ஏதாவது சர்ச்சையை கிளப்பினால் தான் விளம்பரம் கிடைக்கிறது என்று திரையுலக பிரபலங்கள் சிலரே தெரிவித்தனர். இந்நிலையில் அந்த கலாச்சாரம் அரசியலுக்கும் வந்துள்ளது. பாய் கட்டிங் வைத்து, குர்தா அணிந்தால் கிரண் பேடியை இப்படி விமர்சிப்பதா?
தீர்க்கதரிசி
ராதாரவி விவகாரத்தில் அவர் பெயரை குறிப்பிடாமல் ட்வீட் செய்த நடிகையும், மக்கள் நீதி மய்யம் நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா ஒரு தீர்க்கதரிசி. அவர் ட்வீட் தற்போது நாஞ்சில் சம்பத்துக்கும் பொருந்தும்.


Click it and Unblock the Notifications











