Just In
- 3 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 4 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 5 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 6 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிகர் திலகம் சிவாஜியின் அரசியலை ஒப்பிட்டு அவதூறாக விமர்சிப்பதா? நடிகர் நாசர் ஆவேசம்
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனை அவதூறாக விமர்சிக்க வேண்டாம் என்றும் அது கண்டிக்கத் தக்கது என்றும் நடிகர் நாசர் கூறியுள்ளார்.
நடிகர் சிவாஜியை பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருவது அதிகரித்து வருகிறது.
அனிதாவால் காண்டான அர்ச்சனா.. விஷப்பூச்சி சோம்பேறி என்று பெயர் வைத்த ரமேஷ்.. என்னாக போகுதோ!
அவருடைய அரசியல் பயணத்தோடு ஒப்பிட்டு, விமர்சகர்கள் கீழ்த்தனமாக விமர்சிக்கின்றன.

கலக்கப் போவது யாரு
ஏற்கனவே, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அவரை கிண்டல் அடித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதற்கு நடிகர் சிவாஜி கணேசன் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் சந்திரசேகரன், அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

இனி நடக்காது
சிவாஜியின் மகன் நடிகர் பிரபுவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அந்த நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவினர், இனி அது போன்று நடக்காது என்று உறுதி அளித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசரும் அவரை விமர்சிப்பது கண்டிக்கத் தக்கது என கூறியுள்ளார்.

ஆகப் பெரிய வரம்
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவாஜி கணேசன் இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய வரம். பாடிக்கொண்டிருந்த சினிமாவை பேச வைத்ததிலும், திரை நடிப்பு கலையிலும் ஒரு புத்திலக்கணம் வகுத்தவர். சமீபத்தில் பொழுதுபோக்கு என்ற பெயரில், அவர் குரலையும், நடிப்பையும் மலிதாய் பயன்படுத்தியது அவர் பால் அன்பும், மரியாதையும் கொண்ட அத்தனை பேர் மனதையும் புண்படுத்திக் கொண்டிருக்கிறது.

அரசியல் பயணம்
தேர்தல் காலம் நெருங்கி வருகின்ற இவ்வேளையில், திரைத்துறையில் இருந்து பலரும் அரசியல் களமிறங்குகின்றனர். சிவாஜியின் அரசியல் பயணத்தோடு ஒப்பிட்டு, அரசியல் விமர்சகர்கள் கீழ்த்தனமாய் அவரை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. அவரது அரசியல் பயணம் நீண்ட வரலாறு.

கள்ளம் கபடமற்று
பெரும் தலைவர்களோடு பழகியும், பணிபுரிந்தும் வந்தவர். அவர் என்றும் கள்ளம் கபடமற்று மக்களுக்கானவராய் இருந்து வந்தார். இனியும் அவர் பெயரை கண்டபடி பயன்படுத்தாதிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். சமீபத்தில் நடிகர் சங்கத்தில் நடந்த தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.