Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் சங்கம் யாரிடமும் பாகுபாடு காட்டவில்லை - ராதிகாவுக்கு நாசர் பதில்
நடிகர் சங்கம் அதன் உறுப்பினர்கள் யாரிடமும் பேதம் பார்க்கவில்லை. எல்லோரும் ஒன்றுதான் என்று ராதிகாவுக்கு பதில் கூறியுள்ளார் நடிகர் சஙகத் தலைவர் நாசர்.
நடிகர் சங்கம் சமீபத்தில் நடத்தி நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தங்களை அழைக்கவில்லை என்று நடிகை ராதிகா சரத்குமார் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நாசர், நடிகர் சங்கம் அனைவருக்கும் பொதுவானது. நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு பாரபட்சமின்றி அனைவருக்குமே அழைப்பிதழ், நுழைவுச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
ராதிகா அணியிலிருந்த ராம்கி, நிரோஷாவெல்லாம் நிகழ்ச்சிக்கு வந்தார்களே. ஏன், தாமதமாக அழைப்பிதழ் பெற்ற விஜயகுமார் கூட வந்திருந்து வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.
இவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பினோம். வரவில்லை.
ஆனால் நாங்கள் பேதம் பார்க்கிறோம், பாரபட்சம் பார்க்கிறோம் என்று மட்டும் குற்றம் சாட்ட வேண்டாம். அது தவறு, என்றார்.