Don't Miss!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற 6 அற்புதமான டிப்ஸ்..
- News முஸ்லீம்களுக்கு மட்டும்தான் நிறைய குழந்தைகள் இருக்காங்களா? மோடி வீட்டில் எத்தனை பேர் தெரியுமா? ஓவைசி
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தலைவர் இல்லாமல் நடக்கிறது, நாடு அப்படி போய்க் கொண்டிருக்கிறது: இளையராஜா கலகல
சென்னை: தலைவர் இல்லாமல் நடக்கிறது. நாடு அப்படி போய்க் கொண்டிருக்கிறது. நாடு அப்படி போவதால் நாமும் நாட்டோடு போவோம். நம்ம இல்லாமல் நாடு இல்லை என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா கவிக்கோ மன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு அவர் தான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அவர் மிகவும் சுவாரஸ்யமாக பேசினார், அருமையாக பாடினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
தலைமை
ஒரு விழாவுக்கு வந்தால் இளையராஜா தலைமை தாங்குவார் என்ற அறிவிப்பை நான் எதிர்பார்த்தேன். ஒருத்தரும் அறிவிக்கவில்லை. அப்படி எப்படி தான் தலைவர்.
தலைவர்
தலைவர் இல்லாமல் நடக்கிறது. நாடு அப்படி போய்க் கொண்டிருக்கிறது. நாடு அப்படி போவதால் நாமும் நாட்டோடு போவோம். நம்ம இல்லாமல் நாடு இல்லை. நாம் தான் நாடு.
தலைவன்
நான் யாருக்கும் தலைவன் அல்ல. இறைவனுக்கு மட்டும் தொண்டன். கவிக்கோ அவர்கள் செய்த சாதனையை இந்த நாட்டில் ஏன் இந்த உலகில் யாரும் செய்தது இல்லை என்று சொல்லலாம்.
எழுத்து
அவர் அறிமுகமான பின் அவர் எழுதியிருக்கிற அற்புதமான விஷயங்களை படித்தேன். எழுத்தும் எழுத்து உடையாருக்கு என்பேன் நான். உடையார் என்றதுமே வேற உடையாரை நினைக்காதீர்கள்.
கண்ணதாசன்
கவிஞர் கண்ணதாசன் சொன்னார் கலீல் ஜிப்ரானை படிக்கும்போது எல்லாம் இது போன்ற ஒரு கவிஞன் தமிழ்நாட்டில் இல்லையே என்று வருத்தப்பட்டேன். இப்பொழுது அப்துல் ரகுமான் வந்துவிட்டார், என் கவலை தீர்ந்தது என்றார்.
கலைஞர்
கலைஞரோ, எனக்கு வெகுமானம் தருவதாக இருந்தால் ரகுமானை தாருங்கள் என்றார். நிஜமகாவே அவரது கவிதையை காதலித்து அந்த வார்த்தையை சொல்லியிருக்கிறார் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவரை ஒத்த சிந்தனையுடைய கவிஞர்கள் இந்த உலகில் இல்லை. சத்தியம் சத்தியம் சத்தியம் என்றார்.