Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
National Awards 2022: தேசிய விருது விழாவை அலங்கரித்த கோலிவுட் நட்சத்திரங்கள் யார் யார்ன்னு பாருங்க
டெல்லி: அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.
தமிழில் இருந்து 3 திரைப்படங்கள் மொத்தம் 10 தேசிய விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது.
சிறந்த நடிகர், சிறந்த நடிகை, பின்னணி இசை, சிறந்த திரைப்படம் உட்பட பல விருதுகள் தமிழ்த் திரைப்படங்களுக்கு கிடைத்துள்ளன.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை நிக்காம பாக்கலாம்.. கமல்ஹாசன் வெளியிட்ட அடுத்த ப்ரமோ!
டெல்லியில் தேசிய விருது விழா
ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு திரை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில், தமிழில் இருந்து சூர்யாவின் சூரரைப் போற்று, யோகி பாபு நடித்த மண்டேலா, வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ஆகிய படங்கள் மொத்தம் 10 விருதுகளை வென்றன.
விருதுகளை வென்ற சூரரைப் போற்று
சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மொத்தமாக 5 விருதுகளை வென்று அசத்தியுள்ளது. சுதா கொங்கரா இயக்கிய 'சூரரைப் போற்று' ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாகக் கொண்டு வெளியானது. இப்படத்தில் நடித்த சூர்யா சிறந்த நடிகராகவும், அபர்ணா பலமுரளி சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர். அதேபோல், ஜோதிகா, சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து விருதுகளை பெற்றுகொண்டனர். இந்நிலையில், சூர்யாவும் ஜோதிகாவும் தேசிய விருதுடன் தங்களது மகள், மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதேபோல், ஜிவி பிரகாஷும் 'பருந்தாகுது ஊர்க்குருவி" என்ற கேப்ஷனுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் 3 விருதுகள்
பெண்ணடிமைத்தனத்தை பின்னணியாகக் கொண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படத்திற்கு 3 விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த தமிழ் மொழிப் படம் என்ற விருது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த எடிட்டிங்கிற்காக ஸ்ரீகர் பிரசாத் விருது வென்றார். மேலும், முக்கியமான பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற லக்ஷ்மியும் சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றுக்கொண்டார். இத்திரைப்படம் நேரடியாக சோனி ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மண்டேலா இயக்குநருக்கு 2 விருதுகள்
அரசியல் நய்யாண்டி பின்னணியில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்திருந்த 'மண்டேலா' திரைப்படத்துக்கு 2 விருதுகள் வழங்கப்பட்டன. இப்படத்தின் இயக்குநர் மடோனி அஸ்வின் சிறந்த வசனத்திற்காகவும், சிறந்த அறிமுக இயக்குநருக்காகவும் விருதைப் பெற்றுக்கொண்டார். ஒரேயொரு ஓட்டுக்காக சாதியை மறந்து இருபிரிவினர் அரங்கேற்றும் கூத்துகளை பகடியாக விமர்சித்தது 'மண்டேலா.' இப்படமும் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது, மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் தற்போது சிவகார்த்தியன் நடிக்கும் 'மாவீரன்' படத்தை இயக்கி வருகிறார்.
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து மழை
ஒட்டுமொத்தமாக தமிழில் வெளியான 3 படங்கள் 10 விருதுகளை வென்றுள்ளது, தமிழ்த் திரைத்துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விருதுகளை வென்ற கலைஞர்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இது தமிழ் சினிமாவிற்கு மிகவும் ஆரோக்கியமான விசயம் என, சினிமா ஆர்வலர்களும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் விருதுகளை வென்று மூன்று திரைப்படங்களுமே வெவ்வேறு ஓடிடி தளங்களில் வெளியனாதையும் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!