என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா: நயன்தாரா மீது ரசிகர்கள் வருத்தம்
Recommended Video

சென்னை: நயன்தாரா மீது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் மவுன அறவழிப் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் தன்ஷிகா, வரலட்சுமி சரத்குமார் ஆகிய இரண்டு இளம் ஹீரோயின்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மற்ற யாரையுமே காணவில்லை.
மெரினாவில் ஜல்லிக்கட்டு புரட்சி நடந்தபோது நயன்தாரா நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். ஹீரோயின்களில் தில்லாக ஆதரவு தெரிவித்த நயன்தாராவுக்கு பாராட்டுகள் வந்து குவிந்தது. அப்படிப்பட்ட நயன்தாரா திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளாதது ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது.
விருது விழாக்களுக்கு ஃபுல் மேக்கப் போட்டு அலங்காரமாக செல்லும் நடிகைகளுக்கு முக்கிய போராட்டத்தில் கலந்து கொள்ள நேரம் இல்லையா என்று ஆளாளுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











