Don't Miss!
- Education 5-ம் வகுப்பு வரையிலான வினாத்தாள் நடைமுறை மாற்றம்.!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- News மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக.. சேர்ந்து மூழ்கப்போகுது.. கூட்டணி பற்றி கமெண்ட் அடித்த காங்கிரஸ்!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி: நறுக்குன்னு ஒரு கேள்வி கேட்ட சின்மயி
Recommended Video
சென்னை: நயன்தாராவை கேவலமாக பேசிய ராதாரவிக்கு தக்க பதிலடி கொடுத்து ட்வீட் செய்துள்ளார் பாடகி சின்மயி.
கொலையுதிர் காலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயன்தாராவை பற்றி கேவலமாக பேசினார். அதை கண்டித்து ட்வீட் போட்ட இயக்குநர் விக்னேஷ் சிவனோ ராதாரவி மீது யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்றார்.
விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்த பாடகி சின்மயி கவலை அடைந்துள்ளார். சின்மயி ஏற்கனவே ராதாரவி மீது புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவை கேவலப்படுத்திய ராதாரவி: வெளுத்து வாங்கிய விக்னேஷ் சிவன்
|
விக்னேஷ் சிவன்
ஒரு நடிகர் நயன்தாராவை பற்றி கேவலமாக பேசியும் அந்த நடிகைக்கு ஒருவரும் ஆதரவளிக்க மாட்டார்கள் என்று விக்னேஷ் சிவன் கூறினால், எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்கிறார் சின்மயி.
|
நடிகர் சங்கம்
பிற யூனியன் விஷயத்தில் தலையிட முடியாது என்பதால் என் விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் ஆகியவற்றால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனால் இந்த ஆள் வெற்றிகரமான நடிகையை மேடையில் கேவலப்படுத்தியுள்ளார். முடிந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார் சின்மயி.
|
கண்டனம்
ராதாரவி நயன்தாராவை பற்றி தரக்குறைவாக பேசியதற்கு எந்த நடிகராவது கண்டனம் தெரிவிக்க மாட்டாரா என்று நேற்றில் இருந்து காத்திருக்கிறார் சின்மயி.
|
நயன்தாரா
கூப்பிடுறவங்க கூப்பிடுறவங்கன்னு சொல்றாரே ராதாரவி. அந்த கூப்பிடற ஆம்பளைங்க யாரு? அவங்கள தானே அசிங்கப்படுத்தணும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சின்மயி.