Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆர்யா ஹீரோயின்களை பார்த்தால் என்ன சொல்வார்?: தொழில் ரகசியத்தை கசியவிட்ட நயன்தாரா
சென்னை: ஆர்யா எந்த ஹீரோயினை பார்த்தாலும் என்ன சொல்வார் என்பதை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
நயன்தாரா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடன் பணியாற்றிய நடிகர்கள் பற்றி மனம் விட்டு பேசியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜீத், விஜய், ஆர்யா உள்ளிட்டோர் பற்றி பேசியுள்ளார்.
அதில் ஆர்யா பற்றி நயன்தாரா கூறியிருப்பதாவது,
விளையாட்டு
நான் பணியாற்றிய ஹீரோக்களிலேயே ஆர்யா சரியான விளையாட்டுப் பிள்ளை. அவர் சீரியஸாக இருந்து நான் ஒருமுறை கூட பார்த்ததே இல்லை. எப்பவுமே ஜாலியாக இருப்பார்.
ஃபன்
ஆர்யாவுக்கு விளையாட்டுத்தனம் ஜாஸ்தி. செட்டில் நாம் ஏதாவது சீனை நினைத்து சீரியஸாக யோசித்துக் கொண்டிருப்போம். அப்போ ஏதாவது செய்து சொதப்பிவிட்டு நாம் என்ன யோசித்தோம் என்பது மறந்துவிடும்.
ஷூட்டிங்
ராஜா ராணி படத்தில் நடித்தபோது ஒரு நாள் ஆர்யாவுக்கு மதியம் தான் ஷூட்டிங். காலையில் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்கள். நான் சீரியஸாக அழும் காட்சியை படமாக்கினார்கள்.
அழுகை
நான் அழுதுகிட்டு இருந்தேன் திடீர் என்று பார்த்தால் கேமரா மேன்கள் எல்லாம் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் ஃபீல் பண்ணி அழுது கொண்டிருந்தேன் அவர்களோ சிரித்தார்கள்.
ஹீரோ
பார்த்தால் அந்த ஆர்யா பையன் பின்னால் நின்று கொண்டிருந்தார். சோபா மீது படுத்துவிட்டார். அவர் என்னென்னவோ பண்ணி சிரிச்சு அப்புறம் நான் மீண்டும் கிளிசரின் போட்டு அழுது நடித்தேன்.
டயலாக்
எல்லா நடிகைகளிடம் நீங்கள் தான் எனக்கு பிடித்தவர் என்று ஒரே டயலாக்கை சொல்வார் ஆர்யா. ஆர்யாவுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்பது அவருக்கு தான் தெரியும் என்றார் நயன்தாரா.