Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஷூட்டிங் ஆரம்பித்த பத்தே நாட்களில் ஓடிப்போன ஹீரோயின்... அடம்பிடித்த அட்டக்கத்தி தினேஷ் நாயகி!
Recommended Video

சென்னை: லோ பட்ஜெட் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட ஹைவோல்டேஜ் படம் நெடுநல்வாடை என அப்படத்தின் இயக்குனர் செல்வக்கண்ணன் கூறினார்.
புதுமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கியுள்ள படம் நெடுநல்வாடை. இவருடன் உடன் படித்த 50 நண்பர்கள் பணமுதலீடு செய்து, பி ஸ்டார் புரடக்ஷன்ஸ் என்ற பேனரில் இந்த படத்தை தயாரித்துள்ளனர். சுமார் 2ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம் மார்ச் 15ம் தேதி ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் P.மதன் இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர்களில் ஒருவரான சுந்தர், படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த பத்தே நாட்களில், ஹீரோயின் அதிதி மேனன் நடிக்க மறுத்து ஓடிப்போய்விட்டதாகக் கூறினார்.
ஆபீஸ்ல நண்பர்கள்.. செம்பருத்தியில் சண்டைக்காரர்கள்.. சீரியல் எபக்ட்!

பட்ஜெட் எகிறிவிட்டது
இதுகுறித்து அவர் பேசியதாவது, "படம் எடுக்க முன்வந்தபோது நாங்கள் நினைத்த பட்ஜெட்டை விட பல மடங்கு தாண்டிவிட்டது. ஆனாலும் நண்பர் செல்வக்கண்ணன் எவ்வளவு நேர்மையானவர் என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால் எதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் தொடர்ந்து செலவு செய்து இப்படத்தை முடித்தோம். இப்போதும் கூட இந்தப் படத்திலிருந்து ஒரு பைசா கூட திரும்பி வராவிட்டாலும் இயக்குநர் மீது எங்களுக்கு இருக்கும் ப்ரியங்களும் நட்பும் அப்படியே இருக்கும்.

பாதியில் ஓடிய ஹீரோயின்
எங்களுக்கு சினிமா பற்றி தெரியாது. படம் ஆரம்பித்த 10 நாட்களில் அப்போது ஹீரோயினாக நடித்த அதிதி மேனன், நடிக்க மறுத்து ஓடிப்போய்விட்டார். அப்போது அவர் அபிசரவணனுடன் இருந்தார். நாங்கள் அபிசரவணணிடம் பேசினோம். இருப்பினும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து புதிதாக ஒரு ஹீரோயினை வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தை முடித்துள்ளோம்' என அவர் கூறினார்.

பொய் சொல்லவில்லை
பின்னர் பேசிய இயக்குநர் செல்வக்கண்ணன்,"இந்தப் படம் எத்தனையோ முறை டிராப் ஆகவேண்டியது. ஆனால் நடந்த உண்மைகள் எதையும் மறைக்காமல் பிரச்சினைகள் அத்தனையையும் நண்பர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிக்கொண்டே இருந்தேன். அவர்களுக்கு பிராக்டிக்கலான சினிமா குறித்து எதுவுமே தெரியாதென்றாலும் நான் பொய் சொல்லவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து உதவி படத்தை முடிக்க உதவினார்கள்.

ரசிகர்கள் மீது நம்பிக்கை
நல்ல படங்களை ரசிகர்கள் ஒருநாளும் கைவிட்டதில்லை என்ற நம்பிக்கையில் மிகவும் தரமான ஒரு படத்தை நல்ல டெக்னீஷியன்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறேன். நெடுநல்வாடை' லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹைவோல்டேஜ் படம்" என்றார்