விஜய் அண்ணாவால் நான் மேலே மேலே மேலே போகின்றேன்: 'நெருப்புடா' காமராஜ்
சென்னை: இளைய தளபதி விஜய் தனக்கு போன் செய்து பேசிய மகிழ்ச்சியில் உள்ளார் நெருப்புடா புகழ் பாடலாசிரியர் அருண் காமராஜ்.

ஒய் திஸ் கொலவெறி பாடல் போன்று ரஜினியின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடல் உலகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளது. தமிழ் தெரியாதவர்கள் கூட நெருப்புடா என்று கூறி வருகிறார்கள்.
சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் கூட ஆண்களின் நெருப்பு போன்ற சருமத்திற்கு இந்த கிரீம் தேவை என்று கூறும் அளவுக்கு நெருப்புடா பிரபலம் ஆகிவிட்டது. இதனால் நெருப்புடா பாடலை எழுதிய அருண் காமராஜ் மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில் அவருக்கு இளைய தளபதி விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது குறித்து அருண் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
திடீர் என்று போன் செய்ததற்கு மிகவும் நன்றி விஜய் அண்ணா. என்னை ஊக்குவித்ததில் மிகவும் மகிழ்ச்சி. நான் பறக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











