Just In
- 4 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 4 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 6 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 7 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மோடி பட தயாரிப்பாளர் யார் தெரியுமா?: தீயாக பரவும் அதிர்ச்சி தகவல்
மும்பை: பி.எம். நரேந்திர மோடி படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் வெளிநாட்டு சிறுவனக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு பி.எம். நரேந்திர மோடி என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ள அந்த படத்தை சந்தீப் சிங் தயாரித்துள்ளார்.

முன்னதாக சந்தீப் சிங் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மைனர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியவர். இந்நிலையில் மோடி படத்தை யார் தயாரிக்கிறார் என்று பாருங்கள் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சந்தீப் சிங் கடந்த ஆண்டு தான் பாலியல் புகாரில் சிக்கினார். அதன் விபரம் இதோ,
மோடிஜி நீங்க அறிவிப்பு விட்டாலே பயந்து கெடக்கு: அஜித் பட நடிகை கலகல
சந்தீப் சிங் புது படத்திற்கு லொகேஷன் பார்க்க மொரீஷியஸுக்கு சென்றார். அங்கு அவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சிறுவனிடம் நைசாக பேசி தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுவன் அவர் பிடியில் இருந்து தப்பிச் சென்று தனது தந்தையிடம் நடந்தது பற்றி தெரிவித்துள்ளார்.
சிறுவனின் தந்தை ஹோட்டல் ரிசப்ஷனுக்கு சென்றால் அங்கு பாதுகாவலர்கள் யாரும் இல்லையாம். ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சிறுவனிடம் சில்மிஷம் செய்த வேகத்தில் சந்தீப் ஹோட்டலை விட்டு வெளியேறி, மறுநாளே நாடு திரும்பிவிட்டார்.
இது குறித்து சிறுவனனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி நடந்த சம்பவம் பற்றி மக்கள் தற்போது மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.