Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மோடி பட தயாரிப்பாளர் யார் தெரியுமா?: தீயாக பரவும் அதிர்ச்சி தகவல்
மும்பை: பி.எம். நரேந்திர மோடி படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் வெளிநாட்டு சிறுவனக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு பி.எம். நரேந்திர மோடி என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ள அந்த படத்தை சந்தீப் சிங் தயாரித்துள்ளார்.
முன்னதாக சந்தீப் சிங் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மைனர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியவர். இந்நிலையில் மோடி படத்தை யார் தயாரிக்கிறார் என்று பாருங்கள் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சந்தீப் சிங் கடந்த ஆண்டு தான் பாலியல் புகாரில் சிக்கினார். அதன் விபரம் இதோ,
மோடிஜி நீங்க அறிவிப்பு விட்டாலே பயந்து கெடக்கு: அஜித் பட நடிகை கலகல
சந்தீப் சிங் புது படத்திற்கு லொகேஷன் பார்க்க மொரீஷியஸுக்கு சென்றார். அங்கு அவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சிறுவனிடம் நைசாக பேசி தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுவன் அவர் பிடியில் இருந்து தப்பிச் சென்று தனது தந்தையிடம் நடந்தது பற்றி தெரிவித்துள்ளார்.
சிறுவனின் தந்தை ஹோட்டல் ரிசப்ஷனுக்கு சென்றால் அங்கு பாதுகாவலர்கள் யாரும் இல்லையாம். ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சிறுவனிடம் சில்மிஷம் செய்த வேகத்தில் சந்தீப் ஹோட்டலை விட்டு வெளியேறி, மறுநாளே நாடு திரும்பிவிட்டார்.
இது குறித்து சிறுவனனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி நடந்த சம்பவம் பற்றி மக்கள் தற்போது மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.